எனக்காக, சலபதிக்காகவும்
எனக்காக, சலபதிக்காகவும்
களந்தை பீர்முகம்மது
இந்த மார்ச் ஆறாம் தேதியன்று ‘தமிழ் முஸ்லிம் திண்ணை’ சார்பில் நான்கு முஸ்லிம் எழுத்தாளர்களை அவர்களின் இலக்கியப் பணியையொட்டிக் கௌரவித்தார்கள். சென்னையில் நடைபெறவிருந்த அந்த விழாவிற்கு நான் சலபதி அவர்களை வரச்சொல்லி அழைத்தேன். கொரோனா தொற்றுக்குப் பின் அவர் வேறெந்த நிகழ்ச்சியிலும் அதுவரை கலந்துகொண்டிருக்கவில்லை. அதனால் என் விழாவுக்கும் தான் வரமுடியாதென்று சொல்லிவிட்டார். அத்துடன் நில்லாமல், ‘நீங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசியைப் போட்டுவிட்டீர்களா’ என்றும் கேட்டார்.
எங்கள் ஊரில் அந்த ஊசியை எங்கு செலுத்துகிறார்கள் என்கிற விவரம் என்னிடம் இல்லை. நானும் அப்போது வரைக்கும் அதை நினைத்துப்பார்க்கவும் இல்லை. இந்த வி