இதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்
இதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்
ச. பாலமுருகன்
டாக்டர் வெ. ஜீவானந்தம் கடந்த 2.3.2021 அன்று ஈரோட்டில் மறைந்த செய்தியைக் கேட்டவுடன் இனம் புரியாத வெறுமை ஆட்கொண்டது. ஏதோ ஒருவகையில் அவர் நம்பிக்கை ஊட்டும் சக நண்பராய் நம்மோடு பயணித்தவர். அவரின் பல நண்பர்களும் அந்த வெறுமையை உணர்ந்துள்ளனர்.
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் வெங்கடாசலத்தின் மகன். சிறுவயதில் அவரது வீட்டிற்குக் கம்யூனிஸ்ட் தோழர் ஜீவானந்தம் போன்ற ஆளுமைகள் வருவதுண்டு என்றும் தன் குழந்தைகள் அவரின் உடலில் உள்ள காயத் தழும்புகளை காட்டிக் கேட்கும்போது ஒவ்வொரு காயத் தழும்புக்கும் ஒரு போராட்டத்தைத் தோழர் ஜீவானந்தம் நினைவு கூர்வார் என்றும் தோழர் வெங்கடா