திராட்சை மணம் கொண்ட பூனை
கதை
பா. திருச்செந்தாழை
திராட்சை மணம் கொண்ட பூனை
‘க்ளிங்’ எனும் ஒலியுடன் இருட்டு இழைந்திருந்த தரையில் வழுக்கியபடிச் சாவிக்கொத்து கட்டில் காலருகே வந்துநின்றது. சுற்றிலும் அடர்ந்திருந்த இருளில் இன்னமும் வெக்கை அலைய, கண்ணைத் திறவாமலே சாவிக்கொத்தின் மினுமினுப்பை அவள் உணர்ந்தாள். கண்கள் காட்சிகளை வெறுத்து இருளிலேயே மிதக்க விரும்பின. சாவிக்கொத்தின் சிறிய வெளிச்சம்கூட இந்த இருளைக் காயப்படுத்திவிடுமெனத் தோன்றியது. நல்ல புணர்ச்சிக்குப் பிறகான மதமதப்பில் மூழ்கியிருந்தாள். கைகள் அநிச்சையாக உடலின் மேடுகளில், பள்ளங்களில் தேங்கி நின்ற ஒரு துளி வலியை மெல்ல வருடிவருடி நறுமணமாய்ப் புகையச் செய்தன. ஒரு விலங்கின் தீவிரத்துடன் உச்சத்தில் தன்னை முகத்தோடு முகம் நோக்கிய அவனின் சித்திரம் இன்னமும் ஞாபகத்தில் மிதந்தது. அதில் தோன்றிய இதுவரை காணாத இனிய வன்மத