சிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது
சிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது
சித்ரா பாலசுப்ரமணியன்
கடந்த வருடம் இந்தக் காலகட்டம் எத்தகைய பதற்றத்துடனும் அச்சத்துடனும் கழிந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம் என்று சிரிப்பும் வருகிறது. அன்றாடச் செயல்பாடுகளில் பெரிய அளவில் சிரமங்கள் ஏதும் தோன்றாத ஓரளவு வசதியான நகர்ப்புற வாழ்வுதான் என்றாலும் அவ்வப்போது தலைதூக்கிய அச்ச உணர்வு பெருமளவு மனச் சமநிலையைப் பாதிக்கவே செய்தது.
என் மகள் சென்ற வருடம் தன் உயர்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஊர் திரும்பினாள்.
வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாள் என்ற உடனேயே கொரோனா கண்காணிப்புத் தொடர்பான தொடர் விசாரணைகள் பதினைந்து நாட்களுக்கு விடாமல் தொடர்ந்தன.
சுகாதார ஆய்வாளர் ஒர