பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்’
பாரதியியல்
ய. மணிகண்டன்
பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்’
பாரதியின் எழுத்துகளையும் அவருடைய இறுதிக்கால வாழ்க்கையையும் அறிந்தவர்களுக்குப் பாபநாசம் நன்றாகவே நினைவிருக்கும். இலக்கியம் பயின்றவர்களுக்கும் குருகுலம் அறிந்தவர்களுக்கும் வ.வெ.சு. ஐயரின் வாழ்க்கை முடிந்த கதையும் நினைவுக்கு வரும். புதுவை வாசத்திற்குப் பிறகு பாரதி நுகர்ந்த பழைய வாசங்களுள் ஒன்று பாபநாசம். கடலூர்ச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக் கடையம் வந்து தங்கிய பாரதி பாபநாசத்திற்குப் போயிருந்தார். தாமிரபரணி ஓடும் இடத்தில் ஒரு பாறைமீது உட்கார்ந்திருந்தார். அந்த நதியை