அறிவியல் தமிழறிஞர்
அஞ்சலி இராம. சுந்தரம் (1938 - 2021)
பா. மதிவாணன்
அறிவியல் தமிழறிஞர்
1980களில், தமிழ்ப் பல்கலைக்கழக வரவு, தஞ்சை வட்டாரத்தின் கல்வியுலகில் - குறிப்பாகத் தமிழியற் கல்வியுலகில் - சிறிய அளவிலாவது மேல்நோக்கியதொரு அசைவியக்கத்தைத் தொடங்கிவைத்தது. இந்த அசைவியக்கத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நிகழ்ந்த கல்விசார் பணிகளை விடவும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சமூகத்தோடு கொண்ட தொடர்பே முதற்காரணம். அப்படி தஞ்சைக்குக் கிடைத்த அறிஞர்களுள் ஒருவர், நாங்கள் ஆர் எம் எஸ் என்று அன்போடு அழைக்கும் பேராசிரியர் இராம.சுந்தரம்.
பிற தகுதிகளிருப்பினு