மதிப்பு உயர்ந்தது
மதிப்பு உயர்ந்தது
ப. சிவகுமார்
கடந்த வருடம் மார்ச் மாதம் 12ஆம் தேதிக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது .
2020 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு எனது இதயத் துடிப்பு அதிகமாகயிருப்பதையுணர்ந்து மருமகனுடன் தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். உடல் வெப்ப அளவு சரியாகவும் இரத்தச் சர்க்கரை அளவு சற்றுக் கூடுதலாகவும் இருப்பதாகத் தெரிவித்துச் சில மாத்திரைகள் பரிந்துரைத்தார் மருத்துவர்.
காய்ச்சல், சளி, இருமல், சோர்வு எதுவுமில்லை; தொற்று இல்லை என மருத்துவர் கூறினாலும் திருப்தியில்லை. என்னால் யாருக்கும் தொற்று ஏற்படக்கூடாது.
தன்னார்வத்துடன் அரசுமருத்துவமனையில் பரிந்துரை பெற்