தனித்துவத்தின் பேரொளி
தனித்துவத்தின் பேரொளி
அ. முத்துக்கிருஷ்ணன்
சமூகத்தின் விசையாகத் திகழும் மனிதர்களைச் சந்திக்கும் ஆவலுடன் நான் 1990களின் இறுதியில் தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அந்தப் பயணத்தில் பல எழுத்தாளர்களை, செயல்பாட்டாளர்களைச் சந்தித்தேன், அவர்களுடன் உரையாடினேன். அதன் வழியேதான் என் பயணம் உருப்பெற்றது. அந்தப் பயணத்தில் என் நண்பர்கள் சிலர் நீங்கள் அவசியம் ஈரோட்டில் மருத்துவர் ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றார்கள்.
முதலில் அவரது தொலைபேசி எண்ணிற்கு அழைத்தேன். ஒரு செவிலியர்தான் அழைப்பில் பேசினார்; உடன் மருத்துவர் ஜீவா அழைப்பில் வந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரைச் சந்திக்க வருகிறேன் என்றேன். உடனடியாக அவர் எங்கிருந்து வருகி