அகிம்சைப் போராளி
அகிம்சைப் போராளி
இ. கலைக்கோவன்
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, தன் ஆயுள் தீர்ந்த பின்னும் உழைக்கும் சந்ததியை உருவாக்கி விட்டுச்செல்வது சமூகத்திற்குக் கிடைத்த கொடை. ஈரோட்டில் பிறந்து மார்க்சியவாதியாகவும் காந்தியவாதியாகவும் சூழலியல்வாதியாகவும் அறியப்பட்ட மருத்துவர் ஜீவானந்தம் இந்தச் சமூகத்தின் கொடை. குழந்தையின் புன்னகையுடனும் மலர்ந்த முகத்துடனும் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் அன்றலர்ந்த மலராகக் காட்சி அளிக்கும் ஜீவானந்தம், இன்று மலர்கள் தூவிய புகைப்படத்தில் அதே மாறாத புன்னகையுடன் காட்சி அளிக்கிறார். பூக்கள் தம் இதழ் விரிந்த புன்னகையால் அஞ்சலி செலுத்தும் நகைமுரண் அது.‘பூக்களும், இலைகளும், மரங்களும், கிளைகளும் எல்லாவற்றைக் காட்டிலும்