புதிய உலகின் விசித்திரங்கள்
புதிய உலகின் விசித்திரங்கள்
இசை
என் வாழ்வில் நான் கண்ட பெரும் தொற்று நோய் இந்த கொரோனோதான். ‘பிளேக்’ பற்றிப் பாட்டி சொன்ன கதைகள் உண்டு. எங்கள் ஊரின் கோடியில் ‘பிளேக் மாரியம்மன்’ என்று ஒரு அம்மன் உண்டு. அவள் அந்த நோயிலிருந்து மக்களைக் காத்தவளாக இன்றும் வணங்கப்படுகிறாள். எய்ட்ஸ் வந்தபோது நிலவிய அச்சம் ஒரு கட்டுக்குள் இருந்தது. அதன் காரணங்கள், பரவும்விதம் போன்றவை மருத்துவ வல்லுநர்களால் தெளிவாக முன்வைக்கப்பட்டன. அது கொரோனோவைப்போல மொத்த ஜனத்திரளையும் அச்சுறுத்தவில்லை. ஆனால் கொரோனோ நோய் குறித்த குழப்பங்கள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை.
ஒரே அறையில் பத்து நாட்களுக்கும் மேலாக ஒன்றாகத் தங்கியிருந்து, குலாவி மகிழ்ந்த இருவருள் ஒருவருக்கு பாசிட்டிவ், இன்னொருவர