ஒன்றோடு நில்லாது
ஒன்றோடு நில்லாது
போகன் சங்கர்
கொரொனா தொற்று தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக போன வருடம் மார்ச் இறுதி வாரத்தில் ஆரம்பித்தது. இன்று ஒரு வருடம் முடிந்துவிட்டது. இரண்டாம் அலை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இதை இந்திய அளவிலும் தமிழக அளவிலும் எப்படி எதிர்கொண்டோம் என்று பார்ப்பது உபயோகமாக இருக்கும். இதில் என்னுடைய பார்வை மருத்துவப் பணியாளர், எழுத்தாளர் என்று இரட்டைப் பொறுப்பு கொண்டது. இரண்டையும் சமப்படுத்தி எழுத முயல்கிறேன்.
நான் கால்நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் துறையில் பணி புரிந்துவருகிறேன். இந்தக் கால கட்டத்தில் இந்தத் துறை சந்தித்த நெருக்கடி என்று நான் கருதுவது டெங்கு காய்ச்சல் பரவலைத்தான். ஆழிப்பேரலையின்போதான மீட்பு, மருத்துவப் பணிகள், முத்தடுப்பு ஊசி