90 வயதினிலே
90 வயதினிலே
ப. கோலப்பன்
எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தோம். என்னுடைய நுரையீரலில் பாதிப்பு ஏதும் இல்லை என்பதாலும், பிராணவாயு அளவு சரியாக இருந்ததாலும் வீட்டிலேயே இருந்தால் போதும் என்று சென்னை மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். காய்ச்சல் ஏற்பட்டால் மட்டும் போட்டுக் கொள்வதற்கு பாரசிட்டமால், ஆண்டிபயாடிக் என்ற முறையில் அசித்ரோமைசின்-500 மாத்திரைகளும் வைட்டமின் மாத்திரைகளும் ஐந்து நாட்களுக்கும் வழங்கினார்கள். நான்கு நாட்களில் பெரும்பாலும் எல்லாரும் சரியாகிவிட்டோம்.
ஆனால் என் அப்பாவுக்கு அந்த நோய் வந்தபோதுதான் கலங்கிப் போனேன். அவருக்குச் சரியாக 90 வயது. திடீரென ஊரிலிருந்து போன் செய்தார். “காய்ச்சல் இரண்டு