கவிதை
கவிதை
ந. ஜயபாஸ்கரன்
emilydickinson_web Courtesy - chantalbennett.com
தயக்கத்தின் காலடிகளுடன்தான் வீட்டுக்குள் நுழைகிறாள் எமிலி. தோட்டத்தில் சிறு உலா. இலைகளில் பதுங்கியுள்ள மணத்தக்காளிக் குறுங்காய்களை எல்லாம் கொய்துவிடுகிறாள் ஒன்றுவிடாமல். தூதுவளையின் முள்இலைகளுடன் இயல்பாக உரையாடுகிறாள். உள்வீட்டில் ஊஞ்சல் பலகையில் சில கணங்கள். பின்முன் உந்தலில்; பிறகு அசையாத நிலையில். புத்தகங்களின் அடுக்கைத் தீண்டாமல் தாண்டுகிறது அவள் பார்வை. மொட்டை மாடியில் தென்படும் மகளிர் கல்லூரியின் பின்நுழைவாயிலில் கைகள் விரித்து நிற்கும் பெருமரக் காட்சி முன்னே