தகைசால் பண்பாளர்
தகைசால் பண்பாளர்
சித்ரா பாலசுப்ரமணியன்
சில இறப்புச் செய்திகள் நம்மை நிலைகுலையச் செய்பவை. அப்படித்தான் இருந்தது மருத்துவர் ஈரோடு ஜீவானந்தம் மறைவுச் செய்தியும். அவரை இருமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். பொதிகை தொலைக்காட்சியின் காந்தி 150 தொடர் பேட்டிகளுக்காக அவரை அணுகியபோது, நேர நெருக்கடி காரணமாக அது கைகூடாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்தது. அவர் சென்னை வருவது சாத்தியமல்ல என்றானபோதும் விடாமல் நாங்கள் முயற்சி செய்தபடியே இருந்தோம். காந்தியச் செயல்பாட்டாளரான அவருடைய பேட்டி இல்லாமல் அந்த நிகழ்வின் தொகுப்பு நிச்சயம் முழுமை அடையாது. அத்தோடு மருத்துவம், சுகாதாரம், நோய்த்தடுப்பு போன்றவை குறித்