ஜனவரி 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2021
    • அஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)
      பிழைகள் அஞ்சும் மனிதர்
    • அஞ்சலி
      நெடுவழி விளக்குகள்
    • பொருநை பக்கங்கள்
      அறிமுகம்
      வேதநாயகரும் சமயநல்லிணக்கமும்
      ஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்
      நீதி நூல்
      பெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து
      சுகுண சுந்தரி (சில பகுதிகள்)
      ஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை
      சித்தாந்த சங்கிரகம்
    • தமிழ் சமஸ்கிருத உறவு
      தமிழ் சமஸ்கிருத உறவு
      தமிழின் மொழி உறவுகள்
      சமஸ்கிருதமயமும் தனித்தமிழ் மரபும்
      தமிழர் வளர்த்த சம்ஸ்கிருதம்
      சம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்
      தமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை
      தமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்
      தமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை
      தமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு
      கிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்
      புருஷார்த்தங்களின் தோற்றமும் வரலாறும்
      திருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்
      சங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்
      இராமாவதாரமும் அத்யாத்மமும்
      பண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்
    • அறிவிப்பு
      காலச்சுவடு 25
    • கதைத்தடம்
      அறிமுகம்
      வேறு நினைப்பு
      உள்ளக் கிளர்ச்சி
      என்ன அது?
      கோவிந்தராவின் மாப்பிள்ளை
      வந்த பெண்
      தவளைகள்
    • கவிதைகள்
      கவிதைகள்
      பிரபஞ்சம் வெய்யலோடிருந்தது.
    • காந்தி 150
      காந்தி 150
      எதிரியை ஒத்துணர்தல்
      ‘சிறிய ஆனால் திடமான குரல்’
      காந்தி - வைதிகர் உரையாடல்
      காந்தியின் தேசியம்
    • கட்டுரை
      கனவுலகின் மாயப்பெருவெளி
    • கவிதை
      நான் ஒரு பாஸ்வேர்ட்
      மாயமுள்
      கேள் மகளே...
    • கதை
      தண்ணீரின் திறவுகோல்
      அலர்
    • சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்
      காலச்சுவடு புதிய வெளியீடுகள்
    • புத்தகப் பகுதி
      பீடிகை
      இஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26
      ‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்
    • தலையங்கம்
      யார்தான் இந்தியக் குடிமக்கள்?
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2020 அஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019) பிழைகள் அஞ்சும் மனிதர்

பிழைகள் அஞ்சும் மனிதர்

அஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)
செல்லப்பா

அஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)

பிழைகள் அஞ்சும் மனிதர்

செல்லப்பா

ஓவியம்: சுந்தரம்

 

அறியப்பட்டவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட மறுகணம் மனம் அவர்களை இறுதியாக எப்போது சந்தித்தோம் எனத் தேடுவது வாடிக்கை. இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் மனம் தோல்வியைத் தழுவும். நஞ்சுண்டன் மரணச் செய்தியை அறிந்தவேளையிலும் அதேபோன்று முயன்றது மனம்; இறுதியில் தோல்வியே எஞ்சியது. அவரைச் சந்தித்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். சட்டென்று இந்தச் செய்தியை உண்மையென்று நம்பமாட்டேன் என மனம் அடம்பிடித்தது. ஏனெனில், அண்மையில் ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரையொன்றை இந்து தமிழில் எழுதியிருந்தார். அது தொடர்பாகப் பேசியபோது இதேபோல் பல ஆளுமைகள் குறித்துத் தொடர்ந்து எழுத இருப்பதாகக் கூறினார். அப்படியான கட்டுரைகளை எழுதி முடிக்காமல் எப்படி அவர் இறந்திருக்க இயலும் என மனம் அறியாமையில் உழன்றது; ஆனாலும், அவரது மரணம் உறுதிப்பட்டது.

நான் அவரது மாணவனல்லன். ஆனாலும் முத்துசாமி, ந. கவிதா, பாலசுப்ரமணியம் வரிசையில் என்னையும் வைத்திருப்பதை அவருடனான உரையாடலில் குறிப்பிட்டிருக்கிறார். ‘அவர் திருத்திய கட்டுரைகளின் பிரதிகளிலிருந்து தமிழின் நுட்பத்தைக் கற்றிருக்கிறேன்’ என்று அவரிடம் ஒருமுறை தெரிவித்தேன். அதைக் கேட்டதும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘இதை நீங்கள் எப்போதும் குறிப்பிடுவீர்கள்தானே’ என வினவினார். ‘நிச்சயமாகச் சொல்வேன்’ என்று கூறியிருக்கிறேன். ஆனால் அதை இப்படி அஞ்சலிக் குறிப்பில் எழுதுவேனென்று நினைத்துப் பார்த்ததில்லை.

மார்க்கேஸின் சிறுகதை ஒன்றை சுகுமாரன் மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அந்தக் கதையைத் திருத்திக்கொண்டிருந்த வேளையில் ஓரிடத்தில், கப்பலில் பயணம்செய்துகொண்டிருக்கும் கதாபாத்திரம் படுக்கையிலிருந்து எழுந்து தரையில் கால் வைத்தது என்பதைப் போன்று ஒரு வரி வந்தது. கப்பலில் எப்படித் தரையைத் தொட முடியும், அது தளம் என்றுதானே இருக்க வேண்டும் என்று கூறித் திருத்தினார் அவர். இதுதான் நஞ்சுண்டன். மொழிரீதியாக அதன் இலக்கணங்களைக் கறாராகக் கைக்கொள்வார். இலக்கிய நயத்துக்காக இலக்கணத்தை மீறுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக உண்மையிலேயே வருத்தப்படுவார்; அதை வெளிப்படுத்தவும் செய்வார். அதனால் சிலரிடம் அவருக்கு அபிப்ராய பேதம் ஏற்படுவதும் இயற்கை. அவரது கருத்தில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் தான் சொல்வது மட்டுமே சரி என்று வாதிடமாட்டார்.

தன்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் குறித்து நண்பர்களுடன் பேசுவதில் அவருக்கு அலாதி மகிழ்ச்சி. இதை அவரது உரையாடல் உணர்த்தும். தனது தனிமையைப் போக்கும் வழிகளில் ஒன்றாக இதை அவர் கருதியிருக்கக்கூடும்.

காலச்சுவடில் அவருடன் இணைந்து பணியாற்றிய காலம் உண்மையிலேயே மொழி தொடர்பான பல அனுபவங்களைத் தந்த காலம். அவருக்கும் அந்தப் பணி மிகவும் பிடித்தமான பணி. அதைக் குறித்துப் பேசும்போதெல்லாம் சிறிது மனப்பிறழ்வுக்கு ஆளானதுபோல் தன்னை மறந்து சிரிப்பார். தேவிபாரதி தன் தந்தையைக் குறித்து உயிர் எழுத்தில் எழுதிய கட்டுரையை ஒருமுறை குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். கண்ணன் தன் தந்தையின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். ஒருபோதும் தனது படைப்புகளை முன்னிறுத்தியோ அவற்றை வாசிக்கும்படியோ கூறியதேயில்லை அவர்; அவர்மீதான மதிப்பை இது அதிகப்படுத்துகிறது.

காலச்சுவடில் பணியாற்றிய காலங்களில் வார இறுதி நாட்களில் பெங்களூருவிலிருந்து வருவார். பெரும்பாலும் காலச்சுவடு அலுவலக நண்பர்களுக்குக் கொறிப்பதற்கு ஏதாவது வாங்கிவருவார். அவரது ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்புவரை பிழைகளைத் திருத்துவது பிரதிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். தொடர்ந்து பக்கங்களைப் பார்க்க வேண்டியதிருந்தால், நடுவில் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்வார். அவருக்கான ஓய்வல்ல அது; தொடர்ந்து பக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் பிழைகளைச் சரியாகக் கவனிக்காதபடிப் போய்விடும் என்ற காரணத்தாலேயே அந்த இடைவெளி.

அவர் பணியாற்றிய ஒழுங்கின் கணக்கில் பார்த்தால் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டு காலத்தில் 20,000 பக்கங்களையாவது (ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு மூன்று முறை பிரிண்ட் எடுத்து வாசிப்பது அவர் வழக்கம்) எடிட் செய்திருப்பார் நஞ்சுண்டன். சென்னைக்கு வர முடியாத நாட்களில் கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி, திருத்தி வாங்கியிருக்கிறேன். தனது எழுத்துப் பணியைவிடச் செம்மையாக்கப் பணியில் அவருக்குப் பெரும் திருப்தி கிடைத்திருக்கலாம். 

நான் காலச்சுவடில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததே ஒரு விபத்துதான். இந்த வாக்கியத்தை எழுதும்போதே காலச்சுவட்டில் என்பதுதான் சரி ஆனாலும் காலச்சுவடில் என்று எழுதுவது பழகிவிட்டது என அவர் மொழிந்தது நினைவில் எழுந்தடங்கியது. இப்படியாக எங்கேயாவது தமிழில் ஒரு பிழையைப் பார்க்க நேர்ந்தால் உடனே மனம் நஞ்சுண்டனை நினைத்து மீளும். மொழியியல்ரீதியான ஏதாவது சந்தேகம் எழுந்தால் அதைத் தீர்த்துக்கொள்ள அவரை அழைப்பேன். இனி, அந்த வாய்ப்பற்றுவிட்டது என்பதே சுயநலம் கொண்ட மனத்தை உறுத்துகிறது.

 

மின்னஞ்சல்: namchellappa@gmail.com

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.