வி. சங்கர் கவிதைகள்
1.
என் கண்காம்பு அழியவிட்டேன்
ஐய!
நின் நிறம் மறந்ததன்றோ
அக் கூர்காம்பு அழியவிட்டேன்
நின் கமழ்காற்று மறந்ததன்றோ
கைகாம்பு அழியவிட்டேன்
தீண்டிய நும்மிடை மறந்ததன்றோ
மண்ணெல்லாம் அழியவிட்டேன்
நின் காற்காம்பு மறந்ததன்றோ
சொல்லெல்லாம் அழியவிட்டேன்
நின் நாநுனிக் காம்பு மறந்ததன்றோ
எனை எங்கோ விட்டுவைத்தேன்
நின்காம்பு மறந்தறியாதன்றோ.
2.
வேம் பாலை விழுந்த
கூழாங்கல் யாம்.
அக்கூழாங்கல்லினுள்
நீர்வண்ண வித்து யாம்.
உன் பொன்நிறமென்னை
பாலையாய் பொடிக்குமோ?
உன் காற்றீரமென்னை
வனமாய் கமழ்த்துமோ?
யாமழைப்பது எப்புள் சிறக்கை?
என்னுள்ளிருப்பது எக்குருவியின் கருப்பை?
இப்பாலையில் இட்ட
ஆகாயத்துப் பொற்புள்ளே நீ எங்கே?
3.
அன்னையே
உன் பாதப் பூவடிக்குள்
கூர்முட்கள் வைத்திருக்கிறாயா?
அப்பாதங்களில்<
