அக்டோபர் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
அக்டோபர் 2025
    • கட்டுரை
      தெரு நாய்களும் கடல் ஆமைகளும்
      சூத்திரங்கள் மாறலாம் விழுமியங்கள் மாறாது
      விலங்குப் பண்ணை: 80 ஆண்டுகள் விலங்குகள் சொல்லும் அரசியல் பாடம்
    • கதை
      நீலகேசி
      நனவிலி பிம்பங்கள்
    • பாரதியியல்
      முத்துலட்சுமியை எழுதச்சொன்ன பாரதி
    • அறிமுகமும் மொழிபெயர்ப்பும்
      வான்கா: ஒப்பற்ற கலைஞனின் உண்மையான வாழ்க்கை
    • நாவல் சிறப்புப் பகுதி தொடர்ச்சி
      சிற்றுடுக்கையின் பேரொலி
    • பதிவு
      எளியோர் வரலாற்றை எழுதியவர்
      பெருமழை பெய்தபோதும்
      பாட்டும் பாராட்டும் வரலாற்றுத் தருணம்
    • அஞ்சலி: ஆர்.எஸ். நாராயணன் (1938--2025)
      சொல்லேர் உழவர்
    • கடிதம்
      கடிதங்கள்
    • திரை
      மௌனத்தின் மறுபக்கம்
    • கற்றனைத்தூறும்-11
      அறப்பணிக்கு டெட் தேர்வா?
    • கடிதங்கள்
      ‘அன்புள்ள வசந்தகுமார்’ சு.ரா. கடிதங்கள்
    • மதிப்புரை
      தற்புகழ்ச்சியற்ற எழுத்து
      உயிரின் வாதை
    • அஞ்சலி: பி.வி. கரியமால் (1929 - 2025)
      தீராத் தியாகம்
    • தலையங்கம்-2
      பிணை மறுப்பு: நீதியின் வன்முறை
    • கவிதைகள்
      பெருமாள்முருகன் கவிதைகள்
    • தலையங்கம்
      அடிப்படைவாதத்துக்கு உரம்சேர்க்கும் மௌனம்
    • அறிமுகம்
      என்னை அழிக்க யாருண்டு எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2025 கடிதம் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதம்

‘அயலாரையும் அரவணைக்கும் அரசியல்’ தலையங்கம் கருத்தியலாக மிகவும் சரியானதே. ஆனால் நடைமுறையில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. வடவர்களை இழிவுசெய்து ஒதுக்குவதை ஏற்க முடியாது. அதேசமயம் வடவரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்கத் தமிழரின் நலம் பாதிக்கப்படும் என்ற கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. இன்று தமிழ்நாட்டு முதலாளிகள் வடவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முதன்மையான காரணியாக இருக்கிறார்கள். தொழிலாளர் நலம் பேணும் அரசு அமையாதவரை இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவர முடியாது.

ஏ.பி. இராஜசேகரனின் ‘ஆணவக்கொலைகளின் உண்மை விலை’ கட்டுரை தரும் செய்தி அதிர்ச்சியாக உள்ளது. சாதியின் பேரால் கொல்லப்பட்ட தலித்தின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதி தலித்துக்களுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்தே வழங்கப்படுவது என்பது அச்சமூகத்திற்கு மேலும் தீமையே செய்கிறது. கட்டுரையாளர் சொல்வது போல் எதிர்காலத்தில் கொலை செய்தவரின் குடும்பச் சொத்திலிருந்தே இந்த நிதியை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அதுதான் எதிர்காலத்தில் சாதியின் பெயரால் கொலைசெய்ய நினைப்பவருக்குள் அச்சத்தை உருவாக்கும்.

சாரா அருளரசியின் ‘விலக்கப்பட்டோருக்கான கல்வி’ கட்டுரை சிறப்பாக இருக்கிறது. அரசு, ஆசிரியர், மாணவர் என மூன்று தரப்பாரின் தவறுகளைச் சுட்டுகிறது. குறிப்பாக ஆசிரியர்களின் மனசாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.

சா.ரு. மணிவில்லன்
சென்னை-87

 

படைப்பாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களைக் கௌரவப்படுத்தும் காலச்சுவடு அறக்கட்டளைப் பணி அர்த்தமுள்ள, ஆக்க பூர்வ இலக்கியத் தொண்டு.  எழுத்துப் பணியில் பொன்விழா காணும் சுகுமாரனின் படைப்புப் பயணத்தை  ஒரு கல்லூரியில்,  அதுவும்  மாணவர்கள் முன்னால் அலசி, ஆராய்ந்தது இளைய தலைமுறைக்கு இலக்கிய எழுச்சியை ஏற்படுத்தக்கூடியது.  200 மாணவர்கள் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கை அலங்கரித்தார்கள் என்பது ஆச்சரிய ஆனந்தமென்றால் அவர்கள் அனைவருக்கும் காலச்சுவடு புத்தக விருந்து படைத்து வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தது பெருமிதத்திற்குரிய இதழியல் பெருமை. காலச்சுவடு பணி கல்லூரிகள்தோறும் தொடரட்டும்.

அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை

 

செப்டம்பர் தலையங்கம், நமது இப்போதைய அரசியல் நிலவரத்தைத் தொட்டுக்காட்டி, சில குறிப்புகளை உணர்த்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கும் பீகாரின் வாக்காளர் சீர்த்திருத்தக் குழப்படிகளும், அதற்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தையும் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டிய தலையங்கம்,  தமது ஒரு பத்திக் கருத்தோடு இந்தப் பிரச்னையை நிறுத்திவிட்டதே! இதை, ராகுல் காந்தி சற்று உணர்ச்சிவசப்பட்டு அவரசப்பட்டுவிட்டார் என்று கூறவந்ததாக எடுத்துக்கொள்வதா? இல்லை, என்னதான் சீர்திருத்த முயற்சி என்றாலும், ஒரு மாநிலத்திலேயே பல லட்சம் வாக்காளர்களது ‘சுதந்திரமான வாக்குரிமை’ பல வழிகளில் குழப்பிவிடப்பட்டிருப்பதை எப்படி அவதானிப்பது என்ற சந்தேகத்தின் குறியீடு என்று எடுத்துக்கொள்வதா?

இருப்பினும், தமது தார்மீக உரிமைகளுக்காகப் பல ஒன்றிய அரசுகளிடம் ஆண்டாண்டுக் காலமாகப் போர்க்கொடி உயர்த்தத் தவறாத தமிழகம், பல வருடங்களாகத் தம்மிடம் வந்து கிடைக்கும் பல்வேறு பணிகளையும் செய்துவரும் ஆயிரக்கணக்கான பிறமாநிலத் தொழிலாளர்களுக்கு எவ்வித அசம்பாவித்தையோ, வெறுப்புணர்வவையோ ஏற்படுத்தியதில்லை’ என்பதைத் தலையங்கத்தின் ‘அயலாரையும் அரவணைக்கும் அரசியல்’ தலைப்பு அருமையாக விளக்கி நிற்கிறது.

இதே இதழில், இன்றைய மனித சமூகத்தின் மாண்பை ஈனப்படுத்தி வரும் சாதிய ஆணவக் கொலைகள் பற்றியும், சாதி வன்முறையில் இளைய தலைமுறையினர் என்பது பற்றியும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய கொடிய நிகழ்வுகளிலிருந்து, ஒரு சில மிகத் தெளிவான உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன:

சி. பாலையா
புதுக்கோட்டை

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.