இ.எம்.எஸ். சந்திப்பு
ஈ.எம்.எஸ். கவிமணியைப் பார்க்கவேண்டும் என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் அதிகம் கம்யூனிஸத்தில் நம்பிக்கை உள்ள கம்யூனிஸ்ட்; தியரிட்டிக்கலானவர்.
இந்த வார்த்தைகள் நான் இப்பொழுது பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளானாலும் அப்பொழுதே அந்த உணர்வு என் மனதில் இருந்தது. இவர் எதற்காக ஒரு கவிஞரைப் பார்க்கப் போகிறார். அதுவும் கம்யூனிஸத்தோடு கொஞ்சமும் சம்பந்தமில்லாத கவிஞர்.
கேரளாவில் ரொம்ப புரட்சிகரமான கட்சியுடன் சம்பந்தமுள்ள எழுத்தாளர்களைத்தான் அவர் எழுத்தாளராக ஒத்துக்கொள்ளுவார். லேசாக ஒருவரை முற்போக்காளன் என்று ஒத்துக்கொள்பவர் இல்லை. அது சம்பந்தமாக இறுக்கமான பார்வையை வைத்துக் கொண்டிருந்தார். பிறகுதான் தெரிந்தது எந்த ஊருக்குப் போனால