அழகைவிட உண்மை முக்கியம் அல்லவா ?
கு. அழகிரிசாமியின் மொழிபெயர்ப்புகள்- ஒரு முன்குறிப்பு
சிறுகதை எழுத்தாளராகக் கொண்டாடப்பட்டு அதற்கென சாகித்திய அகாதமி விருதுவரை பெற்ற எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் பிரசுரமான முதல் படைப்பு, மொழி பெயர்ப்பு நூலாகும். ஆங்கிலத்திலிருந்து தமிழான அது ‘அமெரிக்காவிலே’ (1950 செப்டம்பர், தமிழ்ப் புத்தகாலயம்). அப்போது அவருக்கு வயது 27. அதேபோல இதழில் பிரசுரமான அவரது முதல் கதையும் மொழிபெயர்ப்புதான்; ஆனந்த போதினி’யில் வெளியானது.
சுந்தர ராமசாமி ‘ஜே. ஜே: சில குறிப்புக’ளில் (1981) அவனது டைரிக் குறிப்புகளாகச் சில நாட்களின் குறிப்புகளை எழுதியிருப்பார். அதில் ஒன்றாக வருவது இது:
“13.9.1945: மாக்ஸிம் கார்க்கியின் ‘அமெரிக்கா விலே’ படித்துக்கொண்டிருக்கிறேன். என்ன அற்புதமான எழுத்து! என்ன நுணுக்கம். வர்ணித்துத் தீரவில்லை கார்க்கிக்கு. அமெரிக்க முதலாளித்துவத்துக்கு வளைத்து வளைத்துச் சவுக்கடி. மொழிபெயர்ப்பதில் மேனன் கில்லாடிதான். ஆங்கில ம