புக்கரும் பூக்குழியும்
“2015ஆம் ஆண்டில் பெருமாள் முருகன் தனக்குள் இருக்கும் படைப்பாளி இறந்துவிட்டதாக அறிவித்தார். அவரது ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராகச் சாதியச் சங்கங்கள் போராடின, வழக்காடின, புத்தகப் பிரதிகளை எரித்தன. இதைத் தொடர்ந்து எழுத்துத் துறையிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். 2016இல் நாவலைக் குறித்து நடந்த வழக்கு முடிவிற்கு வந்தது. நீதிபதி இப்படித் தீர்ப்பெழுதினார்: ‘‘இந்த எழுத்தாளர் உயிர்த்தெழட்டும்! அவர் எதில் சிறந்து விளங்குகிறாரோ அதைச் செய்யட்டும்! அவர் எழுதட்டும்!’’ பெருமாள் முருகனுக்கு அந்தத் தீர்ப்பு ஆணையாகவும் ஆசியாகவும் வாழ்த்தாகவும் அமைந்