இதுதான் உங்கள் நுண்ணுணர்வா?
Courtesy: Dallton MD
கோணங்கி தம்மீது பாலியல் குற்றங்களை நிகழ்த்தியதாக ‘மணல்மகுடி நாடகக்குழு’வின் கலைஞர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டோரின் குரல் மிகத் தாமதமாக எழும்பியிருப்பினும் குற்றம் காலத்தை மீறியது; காலத்தின்மீது அழுத்தத்தைத் தரக்கூடியது. மணல்மகுடி, கல்குதிரை என்ற இரு பண்பாட்டு நிறுவனங்கள்மீது மட்டுமல்லாது சூழலின் பிற பண்பாட்டு அமைப்புகளின் போக்குகள்மீதும் இந்தப் பிரச்சினை பொதுக் கவனத்தைத் திருப்பியுள்ளது. கலை, கலை மனம், கலைஞர்களின் பிறழ்வு, சமூகப் பொறுப்பு ஆகியன குறித்த வாதப் பிரதிவாதங்களை இது எழுப்பியிருக்கிறது. இலக்கியக் குழுக்களுக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்த கேள்விகளை முன்னிருத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. கூடவே பாதிக்கப்படும் இளையோர்கள் ஒன்றிணைவதற்கும்,