கவிமணிபற்றி அறிஞர்கள்
உண்மை ஞானி
தேசிக விநாயகம்பிள்ளை தற்சமயம் தமிழில் மாத்திரமின்றி நவீன இந்தியாவிலேயே மிகப் பெரிய உண்மைக் கவிஞர்களுள் ஒருவர். அவர் ஆஸ்துமாவினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும் அவருடைய மனம் எப்பொழுதும்போல சுறுசுறுப்பாகவே இருக்கிறது. அரசியல், இலக்கியம், புதைபொருள் ஆராய்ச்சி, புராணம், வேதாந்தம் ஆகிய எல்லா விஷயங்களைப் பற்றியும் அவர் ஆர்வத்துடன் பேசுகிறார். இராமாயணம் எழுதிய கம்பனைப் பற்றியதாயிருந்தாலும், பாஷாவாரி மாகாணப் பிரிவினை நல்லதா கெட்டதா என்பதைப் பற்றியதாய் இருந்தாலும் அவர் சளைக்காமல் பேசுகிறார். அவருடன் பேசும்பொழுது நவீன உலகத்துடன் தொடர்பு விட்டுப்போகாத ஒரு உண்மை ஞானியுடன் பேசும் உணர்ச்சியே ஏற்படுகிறது.
-பிரபல எழுத்தாளர் கே. ஏ. அப்பாஸ்
(கவிமணி தேவிமலர் 1975)
(கவிமணி வா