எல்லாம் சூனியமாகிப் போனது
Courtesy: Jogen Chowdhury
இந்தச் சீண்டல்கள் எந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தன?
2016ஆம் ஆண்டு 23 வயது வாக்கில் எனக்கு நிகழ்ந்தன அதற்கு முன்பே நான் மணல்மகுடி குழுவிற்குள் இணைந்திருந்தாலும், இலக்கியப் பரிச்சயம், எழுத்து குறித்த எனது ஆர்வம் ஆகியவற்றால் என்னிடம் பேசுவதையும் நெருங்குவதையும் கோணங்கி அதிகப்படுத்தியிருந்தார். அவரது சிறுகதைகளை மட்டுமே வாசித்திருந்ததால் அவர் மீதான மரியாதை அளவுக்கதிமாக இருந்திருந்தது. அதனால், அவர் என்னிடம் அதிகம் பேசுவதை விரும்பினேன். டைப்பிங்கிற்கும் தனியே குடிப்பதற்கும் அவர் அழைக்கத் தொடங்கினார். என்னால் மேற்கொண்டு இதை விளக்கி எழுத முடியவில்லை. என்னிடம் அவர் தவறாக நடக்கத் தொடங்கியதும் நான் அச்சமுற்று, அவரிடமிருந்து விலகுவதற்கும் வேறு அறையில் சென்ற