யானைகளும் மனிதர்களும்
யானைகளும் மனிதர்களும்
(The Elephant Whisperers: ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம்)
மூன்று ஆண்டுகளுக்கு முன் முதுமலைச் சரணாலயத்திலுள்ள தெப்பக்காடு யானை முகாமிற்குச் சென்றிருந்தேன். யானைகளுக்கு உணவு தயாரிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த வளாகத்தின் ஓரத்தில் ஒரு புதிய அடைப்பிடம் எழுந்துள்ளதைக் கவனித்து அங்கே சென்றேன் (இம்மாதிரி அடைப்பிடம் kraal என்று குறிப்பிடப்படுகிறது). அங்கே படுத்துக் கிடந்த ஒரு யானைக்குட்டிக்கு அருகே பழங்குடிப் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அந்தக் குட்டியின் தாய் யானை இறந்துவிட்டதாகவும் அதைக் கவனித்துக்கொள்ளத் தான் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் சொன்னார். சில வருடங்களுக்குப் பின் இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் இவர் தோன்றி உலகப்புகழ் பெறுவார் என்று அன்று நான் அறிந்திருக்கவில்லை.
பெள்ளி என்ற பெயர் கொண்ட இவரும் பொம்மன் என்பவரும் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த யானைக்குட்டியை வளர்க்கும் பணி அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறத