போர்க்கலை
ஓவியம்: மணிவண்ணன்
இஸ்மாயில் என்ற நண்பனைப் பற்றி என் எழுத்தில் குறிப்பிட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. பிணக்கு என்று எதுவும் இல்லை; பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து ஓயாமல் முழங்கையால் இடிப்பவருடன் எவ்வளவு தூரம்தான் பயணம் செய்வது என்ற சலிப்பும் இல்லை; அவன் சிந்தனையின் திசையிலும், நான் உணர்ச்சியின் திசையிலும் மேற்கொண்ட பயணம் இருவருமே எதிர்பார்த்திராத அளவு தீவிரமாக நீண்டுவிட்டதால் நேர்ந்த விலகலும் இல்லை; அவன் தன்னுடைய போக்கை ‘அறிவுஜீவித் தேடல்’ என்றும் நான் என்னுடையதைக் ‘கலையார்வம்’ என்றும் சொல்லிக்கொள்ள ஆரம்பித்ததால் வந்த வினை என்றும் தோன்றவில்லை. பின்னே என்னதான் காரணம் என்று நீங்கள் அலுத்துக்கொள்வது புரிகிறது. எனக்கும் அதே அலுப்புதான்; அவனுக்கும்கூட இருக்கலாம்.
ஆனால், ஒரே வண்டியில் ஒரே சமயத்தில் அருகரு