அதிர்ச்சி, குழப்பம், அவமானம்
Courtesy: Jogen Chowdhury
பாலியல் சுரண்டலுக்கு உள்ளானவர்கள் அதுபற்றி வெளியில் சொல்வதால் எழக்கூடிய சிக்கல்களுக்கு அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசுவதால்தான் இத்தகைய செயல்பாடுகள் வெளியே தெரியவருகின்றன. அமைப்புகளும் தனிநபர்களும் செய்யும் பாலியல் குற்றங்கள் இதன் மூலமாகவே அம்பலத்துக்கு வருகின்றன. அவர்களுடைய நடத்தை, தங்களுடைய செல்வாக்கை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவது முதலானவை குறித்த விவாதங்களும் புரிதல்களும் இதனாலேயே சாத்தியமாகின்றன. இந்தப் பின்னணியில் கோணங்கி - மணல்மகுடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் பொதுவெளியில் முன்வைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்குடன் காலச்சுவடு சார்பில் அவர்களை அணுகினோம். அவர்களில் சிலர் தங்கள் கருத்துக்களை வ