இலக்கணத்தை மீறலாம்
கவிமணியின் கையெழுத்து பிரதி (1906)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1876 ஜூலை 27- 1954 செப்டம்பர் 26) நாஞ்சில் நாட்டு தேரூர் என்ற ஊரினர். தந்தை சிவதாணு பிள்ளை; தாய் ஆதிலட்சுமி; ஆரம்பத்தில் படித்தது மலையாளம். தேரூர் திருவாவடுதுறை ஆதீனம் சாந்தலிங்கம் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்தார்; அரசு பள்ளியிலும். திருவனந்தபுரம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் படித்த பின்னர் கோட்டாற்றுப் பள்ளியில் ஆசிரியர் பணிபுரிந்தார் (1901). இதே ஆண்டில் திருமணம்; மனைவி உமையம்மா.
பின் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் அறிவியல் ஆசிரியரானார். (1901 - 1904) மகாராஜ