கிளி பேசும் எழுத்தச்சன் நினைவகம்
கேரளத்தில் 16 பிப்ரவரி, 2023 அன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற ‘துஞ்சன் திருவிழா’வில் பங்கேற்றேன். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூரின் ஒருபகுதிக்கு இன்று துஞ்சன்பறம்பு என்றே பெயர். மலையாள இலக்கியத்தின் தந்தையான ‘துஞ்சத்து இராமனுசன் எழுத்தச்சன்’ பிறந்து வாழ்ந்த இடம் அது எனக் கருதப்படுகிறது. அவர் நினைவாக ஆண்டுதோறும் ‘துஞ்சன் திருவிழா’ என்னும் இலக்கிய விழா நடைபெறுகிறது. அவ்விழாவில் இவ்வாண்டு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுத் தொடக்கவுரை நிகழ்த்தினேன். துஞ்சன் பறம்பில் உருவாக்கப்பட்டுள்ள எழுத்தச்சன் நினைவிடம் நான்கு ஏக்கர் பரப்பளவுடையது. நினைவுச் சிற்பங்கள், அலுவலகம், நூலகம், ஆவணக் காப்பகம், சிற்றரங்கு, பேரரங்கு, திறந்தவெளி அரங்கு, உணவுக்கூடம், குளங்கள், மரங்கள், புல்வெளிகள், கலைமகள் கோயில், விருந்தினர் இல்லங்கள் முதலிய அனைத்தும் உள்ளடங்கிய அற்புதமான நினைவகம். அதை நிர்வகிக்க இருபது பேர் கொண்ட குழு உள்ளது. குழுவில் பெரும்பாலும் எழுத்தாளர்கள். மலையாளத்தின் மிக மூத்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அதன் தலைவர்.
திரூருக்கு வருவோர்