எஸ். துர்கா
ஒரு பெண்ணாகத் தங்கள் உடலைத் தூக்கிக்கொண்டு நடமாடும் அசவுகரியத்தை ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்திருப்பாள். கையை - காலை நீட்டக் கூடாது, சத்தமாகப் பேசக் கூடாது, சிரிக்கக் கூடாது, மொத்தத்தில் இயல்பாகவே இருக்கக் கூடாது; இதுபோல் பல கட்டுப்பாடுகள். இவற்றையெல்லாம் பின்பற்றினாலும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க முடியுமா? வன்முறை நிகழ்ந்த பிறகு ‘குடும்ப’ப் பெண்களுக்குக் கூடுதலாக ‘உச்’ கொட்டுவார்கள். அடங்காப்பிடாரிகளுக்கு அதுவும் கிடைக்காது. அவ்வளவுதான் வித்தியாசம். இந்தப் பின்னணியில்தான் மலையாளப் படமான எஸ் துர்கா (செக்ஸி துர்கா) கவனத்தை ஈர்த்தது. இந்தப் படம் எடுத்துக்கொண்ட கருப்பொருள்; பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் திருவிழாவின் பின்மாலைக் காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. துர்க்கையின் இன்னொரு வடிவமான முத்தாரம்மன் என்னும் பெண் தெய்வ வழிபாட்டுக்கு அத்தனை அர்ப்பணிப்புடன் ஆயத்தமாகிறார்கள் ஆண் பக்தர்கள். வேறொரு பக்கம் படத்தின் மையப்பாத்திரமான துர்கா நள்ளிரவில் நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருக்கிறாள். வாகனங