உப்புமூட்டைக் கடவுள்
என் தவங்களைத் தின்று வாழும்
இஷ்ட தெய்வமே.
என்னை யுன் செல்லப் பரியாக்கி
கடிதேகும் நீ
என்னையும் கடந்து பறக்கிறாய்.
பேருண்மையின் புழுதியை
இஷ்டம்போல் பூசிக்கொள்ளும்
உன் முன்னால்
வெளிறும் ஒப்பனைகளுடன்
சிரிக்கிறேன் நான்.
ஆகச் சிறந்ததென் உடுப்புகளென
கண்ணாடி எதிர் நிற்கும் என்னை
கெக்கலித்து விரட்டுகிறது
பேதங்களற்ற உன் நிர்வாணம்.
மொழிகளின் வதைபாட்டை
வழிபட்டுத் திரியும் பித்தன் நான்.
உன் மழலைகொண்டு
நிவர்த்திக்கிறாய் எனை.
உன் மௌனம்
எனக்கு மகாயுத்தம்.
உன் இன்னகை
என் காலகண்டம்.
உதடு பிதுக்கி நீ யழுவதே
என் ஆயுள் நடுக்கம்.
இன்னும் துயிலெழாது
விரல்