அச்சத்தின் ஒலி
அடர்ந்த வெளியில் நிரம்பிக் கிடக்கின்றன
களைப்பற்ற சளைக்காத சொற்கள்
தொலைந்து விட்ட ஒரு கடந்த காலம்
பரிகசிக்கிற நிகழ் காலம்
மீட்சியுற வியலாதென நம்புகிற எதிர்காலம்
சாம்பல் நிறம் பூண்ட பொழுதுகளின் மீது
அச்சம் படர்கிறது
நட்சத்திரங்கள் மிதக்கும் வானம்
கண்களை விட்டகர்ந்து யுகங்கள் கூடியாகிற்று
ஜரிகை காகிதங்களில்
புதையப்பட்ட நாசூக்கான
சில தருணங்களைப்
பிரித்துப் பார்த்துச் சலிப்புற்று விட்டேன்
கடிகாரங்களில் தேங்கியிராது
கொட்டிக்கவிழ்ந்து
வறண்டு போய் விட்டது காலம்
நீண்ட மரக்கிளைக்கும் எனக்குமிடையே பால்கனியில்
அமர்ந்திருக்கும் இளம் பச்சை நிற
சிறகு மினுங்கும் புறா ஆசுவாசமாக
அலகைத் தீட்