காலம் கடந்தும் உரையாடுவேன்
உங்கள் கதைகளின் பிரதான கதாபாத்திரங்கள் சமூகப் பொதுக் கட்டமைப்புகளில் இருந்து விலகியே இருக்கிறார்கள். அவர்கள் போராளிகளாக இருக்கிறார்கள், தங்களின் விருப்பத்தால் அன்றி சூழல்களின் கட்டாயத்தால் அப்படி இருக்கிறார்கள், ஏதோ ஒரு விலக்கப்பட்ட கைவிடப்பட்ட சமூகக் குழுவைச் சேர்ந்தவர்கள்போல, எல்லாக் கடவுள்களாலும் கைவிடப்பட்டவர்கள்போல. நிறைய பிரபல நாவல்களில், ஆண் தன் குணத்தில் இருக்கும் குறைபாட்டிற்கு வருந்தி அதற்கான தக்க விளைவையும் சந்திப்பான். ஆனால் உங்கள் கதாபாத்திரங்களான ‘மாதொருபாக’னில் காளி, பொன்னா, ‘கூளமாதாரி’யில், ‘நிழல் முற்ற’த்தில் சக்திவேல் - இவர்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறுகளால் அன்றித் தங்களின் பிறப்புச் சூழலால் இன்னல்களைச் சந்திக்கிறார்கள். அவர்களின் சாதியாலோ வறுமையாலோ இது நிகழ்கிறது. அவர்களுக்கு இவ்வாறான விதியை நீங்கள் சித்திரித்தீர்களா? இல்லை அவர்களின் வாழ்க்கைப்ப