முகமூடி மனிதர்கள்
அந்த நிகழ்வு, முன்னும் பின்னுமாக ஏராளமான நினைவுச் சுவடுகளைக் கோத்துக்கொண்டு என் முன்னே எழுந்து நின்றது. ஒரு போதும் என்னால் நேற்றைக்குள் போகமுடியாதென்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை நான் எதற்காகச் செய்தேன், அதற்கான காரணம் என்ன என்ற கேள்விகள், என் சிந்தனையைக் கலைத்துப் போட்டு, மன நிம்மதியைக் கெடுக்கிறது.
ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத் தமிழன் நான். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தம்பலகமம் கிராமத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவுக்குத் தம்பலகமத்தில் அதிகமான நெல் வயல்கள் இருந்தன. கிராமத்தின் விவசாயச் சங்கத் தலைவரும் அவர்தான். பெற்றோருக்கு ஒரே பிள்ளை நான். படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தால் அப்பா என்னைத் திருகோணமலையிலுள்ள பாட சாலையில் சேர்த்துவிட்டார்.
பாடசாலை விடுதியிலேயே தங்கிப் படித்தேன். என் வாழ்க்கையில் அற்புதமான அனுபவத்தை அருளிய நாட்கள் அவை. படிப்பும் விடுமுறைக்கு வீடு மென மகிழ