ஒளிர்விதை
அவன் வீட்டுக்குள்
நான் அவனறியாது ஒரு விதையிடுவேன்
அது ஒரு நாள்
நிலம் கிளர்த்தி முளை விடும்
ஓரிலை ஈரிலை பின்னொரு சிறு கிளையென
பக்கமெங்கும் கிளைத்து அடரும்
ஒரு நாள் மொட்டுவிடும்
கிளைகளெங்கும் மொட்டுக்கள்
இறுக மூடிக்கொண்ட மொட்டுக்கள்...
அன்றே நள்ளிரவில்
அவை ஒளிர்மஞ்சளாய்ப் பூக்கும்...
காற்றில் கிளைகள் உரசி
பூக்கள் உயிர்கொள்ளும்
பின் காம்பிலிருந்து மேலெழும்
அவை அவன் கண்களை ஏமாற்றி
மின்மினிப் பூச்சிகளாகும்
நட்சத்திரங்கள் சிறகடிக்கும் அறையை
நீங்கள் கனவு கொள்ளுங்கள்
அதற்குப் பின் அவனுக்குக்
கறுப்பான இரவுகளே இல்லை...
இந்த வாழ்வில் கண்டெடுத்த
எல்லா வெளிச்சங்களையும் விழுங்கி ஒளிர் விதையொன்றை
இப்போது சூல் க