புலனாய்வு இதழியலில் முன்னோடி
தமிழில் எது முதல் புலனாய்வு இதழ் என்பதற்குத் தெளிவான உறுதியான விடை கண்டுபிடிப்பது கடினம். தமிழ் இதழியலில் அரசியல் விமர்சனங் களோடு, சமூக அவலங்களையும் சுட்டிக்காட்டி வெளிவரும் பத்திரிகைகளைப் பொதுவாகப் புலனாய்வு இதழ் என்றே அடைமொழியிட்டுக் குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில் இப்போதும் வந்துகொண்டிருக்கும் துக்ளக், ஜூனியர்விகடன், நக்கீரன் போன்ற இதழ்கள் பொதுப் புத்தியில் ‘அரசியல், சமூகப் புலனாய்வு இதழ்கள்’ என்ற படிமத்தை உருவாக்கியுள்ளன.
இவ்வாறு புரிந்துகொண்டதிலிருந்து பார்க்கும் போது 1969இல் வெளிவந்த கிண்டல் பத்திரிகையை நவீன புலனாய்வு இதழியல் போக்கின் தொடக்கப் புள்ளியாகக் கருதலாம். அரசியல் விமர்சனங்கள், நையாண்டிகள், கார்டூன்கள், மக்கள் பிரச்சனை, கொஞ்சம் இலக்கியம் என்ற வடிவத்தில் மாதம் இருமுறை இதழாகக் கொண்டுவரப்பட்டது கிண்டல். ஆனால், அதற்கும் முன்னதாக தமிழ் இதழியலில் புலனாய்வுப் போக்கிலான எழுத்துகள்