247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
அதிகாரம் 1
இந்த ஆங்கில ஐயர்கள் வேறு யாருமல்லர், தமிழர்களின் கலாச்சாரத் திருவுருக்கள். ஒருவர் ரோபர்ட் கொல்ட்வெல் (Robert Caldwell 1814-1891), மற்றவர் ஜி.யூ. போப் (G.U.Pope 1820-1908). முன்னையவர் ‘திராவிடம்’ என்ற கருத்தை வடிவமைத்து ஒரு அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர். பின்னையவர் திருவாசகத்தை மேற்குலகுக்கு அறிய வைத்தவர். முரசொலி பத்திரிகை காலனிய நாட்களில் இல்லை; அன்று அப்பத்திரிகை இருந்திருந்தால் இவர்களைத் திராவிடத்தின் இதயத் துடிப்புகள் என்று கொண்டாடியிருக்கும்.
தமிழின் சிறந்த சான்றோர்கள் எனப் போற்றப்படும் இவர்கள் தமிழுக்கு எதிராக ஈடுபட்ட செயல்பாடு ஒன்று உண்டு. காலப்போக்கில் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட சம்பவம் இது. இந்த இருவரும் செய்த மொழியியல் குற்றம், ஒரு காலகட்டத்தில் தமிழ் எழுத்துகளை முற்றாக நீக்கி அதன் இடத்தில் ரோமன் எழுத்துகளை நிறுவ வேண்டும் என்று தெளிவான மனத்துடன் வாதாடினார்கள். இந்த எண்ணத்தைத் தேவதூதன் காபிரியேல் திடீரென்று இவர்களின் கனவுகளில் தோன்றி “நீங்கள் இருவரும் போய் யாவையும் பாழாக்கி யாவையும
