ஆகஸ்ட் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஆகஸ்ட் 2026
    • கட்டுரை
      அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: தமிழ்
      பெருங்கடலில் சிற்றோடம்
    • திரை; ஹபீபி
      தமிழின் புதிய சலனம்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: இந்தி
      இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மராட்டி
      வார்ப்புகளுக்கு வெளியே
    • பதிவு
      சுதந்திரச் சுடரின் குரல்
    • சிறப்புப் பக்கங்கள்
      இந்தியச் சிற்றிதழ்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: மலையாளம்
      புதிய பூக்கள் மலர்ந்தபோது...
    • அஞ்சலி: சு. இராசகோபால் (1954 – 2026)
      தெளிவுற அறிந்தவர் நயம்பட மொழிந்தவர்
    • அஞ்சலி: எஸ். ஜானகி (1938-2026)
      காற்றில் உந்தன் கீதம்...
    • அஞ்சலி: செழியன் (1972 - 2026)
      ஒளியில் நிலைத்தல்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • இந்தியச் சிற்றிதழ்கள்: வங்காளம்
      மரபை மீறும் வேட்கை
    • பத்தி இன்றும் என்றும் 4
      ஒரு தலைவர், ஓர் அமைப்பு சில அதிகாரிகள்
    • கதைகள்
      அருண்பாண்டியன் மனோகரன் கதைகள்
    • மதிப்புரை
      தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு
    • நேர்காணல்: இயக்குநர் மீரா கதிரவன்
      “நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்”
    • இந்தியச் சிற்றிதழ்கள்: கன்னடம்
      முடிந்துபோன அத்தியாயத்தை அசைபோடுதல்
    • அஞ்சலி: பூமணி (1947 - 2026)
      “அப்பிடிச் சொல்றீங்களோ!”
    • தலையங்கம்
      கனிமக் கொள்ளை பாழ் வாரிப் பெருங்குழி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் 2026 மதிப்புரை தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு

தமிழ் மூலம், ஆங்கிலப் பெயர்ப்பு

மதிப்புரை
கே. தியாகராஜன்

அதிகாரமும் 
தமிழ்ப் புலமையும் 

(தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)
ந. கோவிந்தராஜன் 


வெளியீடு: 
க்ரியா பதிப்பகம்

சென்னை
தொடர்புக்கு: 72999 05950
ரூ. 280

 

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் என்று கேட்டால் பலரும் ஜி.யூ. போப் என்பார்கள். ஆனால் நதேனியல் எட்வர்ட் கைண்டஸ்லி (Nathaniel Edward Kindersley) என்பவரே திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். யார் அவர், ஏன் அவர் அவ்வளவாக அறியப்படாமல் இருக்கிறார், மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளிலிருந்து அவருடையது எவ்வாறு வேறுபட்டுத் தனித்துவம் பெற்றுள்ளது, ஆய்வுக் களங்களில் ஏன் அவருக்கு அதிக இடம் தர வேண்டும் போன்ற கேள்விகளை ந. கோவிந்தராஜன் எழுப்பி அவற்றுக்கான விடைகளை ‘அதிகாரமும் தமிழ்ப் புலமையும்’ என்ற தன்னுடைய தமிழ் ஆய்வு நூலில் தேடுகிறார்.

‘க்ரியா’ வெளியீடான இந்நூல் பல அரிய, புதிய செய்திகளை நமக்குத் தருகிறது. அதை உலகளாவிய ஆங்கில வாசகர்களுக்காக சி.டி. இந்திரா, பிரேமா ஜெகன்னாதன் இருவரும் லண்டன் Routledge பதிப்பு நிறுவன வெளியீடாக ‘Colonial Authority and Tamil Scholarship’ என்று ஆங்கில மொழிபெயர்த்துள்ளார்கள்.

18ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்துசேர்ந்த பிரித்தானியக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியார் காலப்போக்கில் பல இந்திய நிலப்பரப்புகளில் தங்கள் காலனிய ஆட்சி அதிகாரத்தை நிறுவினர். அவற்றின் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் தங்கள் முக்கியப் பணியாக நில வகைகள், வளங்கள், அளவீடுகள், இந்திய நிர்வாக - சட்ட அமைப்புகள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள் போன்ற பல களத் தகவல்களை நேரடியாகச் சேகரித்து ஆவணப்படுத்தினார்கள்.

கல்கத்தாவுக்கு ஆங்கில நீதிபதியாக வந்த வில்லியம் ஜோன்ஸ் (William Jones) சமஸ்கிருதத்தை மிகக் குறுகிய காலத்தில் கற்று விற்பன்னர் ஆனார். அம்மொழி பற்றிய பல ஒப்பியல் ஆய்வுகளை மேற்கொண்டார். சமஸ்கிருதம் இலத்தீனத்தைவிட உயர்ந்த, வளமான, செம்மையான மொழி என்ற பார்வையை மேலை உலகத்துக்கு அறிமுகம்செய்தார். அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த காளிதாசரின் செவ்விலக்கியமாகிய ‘சாகுந்தலம்’ உலகளாவிய புகழ்பெற்றது.

அவருக்குப் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் சென்னை மாகாண அதிகாரியாக வந்த ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் மொழியான தமிழையும் பிற மொழிகளையும் கற்றார். அதற்கும் மேலாக, ‘தென்னிந்திய மொழிக்குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தினார். சான்றுகளும் தந்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் பெரும் புலமையுடன் மொழிபெயர்த்தார். ஜோன்ஸ், எல்லிஸ் போன்ற ஆங்கில அதிகாரிகள் அந்தந்த மூல மொழிப் பண்டிதர்களையும் விஞ்சும் வகையில் உயர்வழக்குச் செவ்விலக்கிய, செம்மொழி ஆய்வுப் பங்களிப்புகளைச் செய்தார்கள்.

வில்லியம் ஜோன்ஸின் சமகாலத்தில் தமிழகத் தென்னாற்காடு மாவட்ட ஆங்கில நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர்தான் நதேனியல் எட்வர்ட் கைண்டஸ்லி. ஆனால் கைண்டஸ்லி எந்த ஆரவாரமும் இல்லாமல், எந்தக் கவனத்தையும் ஈர்க்காமல், ஒரு முக்கியப் பங்களிப்பைச் செய்தார். இதுவரை பார்வைக்கோ ஆய்வுக்கோ எடுத்துக்கொள்ளப்படாத பாமர மக்களின் எளிய நாட்டார் தமிழ் இலக்கிய, பண்பாட்டு மரபின் சில கூறுகளை அவர் முதன்முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தார்.

‘ஹிந்து இலக்கிய மாதிரிகள்’ (Specimens of Hindoo literature) என்ற தலைப்பில் லண்டனில் 1794ஆம் ஆண்டு ஒரு நூலாக வெளியிட்டார். மேலை உலக சராசரி ஆங்கில வாசகர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்துவைத்தார். அக்கூறுகள்: 1) இந்து தெய்வங்கள், பாமரத் தமிழ் மொழி பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் 2) ‘திருவள்ளுவர் குறள் அல்லது ஞானக் கடல்’ என்ற தலைப்பில் குறளின் சில அதிகாரங்கள் 3) ‘நள ராஜா வரலாறு: ஒரு இந்து காதல் கதை’ என்ற தலைப்பில் நளன் – தமயந்தி கதை 4) மதுரை புது மண்டபச் சிற்பங்கள் சிலவற்றின் கோட்டு ஓவியங்கள், சிறு விளக்கங்கள்.

நாட்டுப்புறப் பாமர வழக்கு வாய்மொழிக் கதை களின் பாரம்பரியம் நகர்ப்புற எழுத்துமொழி உயர் வழக்கு இலக்கியப் பாரம்பரியத்தை விடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொன்மையானது. பின்னது முன்னதிலிருந்து தோன்றியதே என்ற மறுக்க முடியாத பார்வை உள்ளது. பண்டைக்காலங்களில் விழாக் கொண்டாட்ட இரவு நேரங்களில் பொது வெளிகளில் ‘கதைசொல்லிகள்’ வாய்மொழிக் கதைகளை உடுக்கை அடித்து உரத்த குரலில் கூறுவது வழக்கம். பாமர மக்களின் ஒரே பொழுதுபோக்குச் சாதனமாக இருந்ததால் அக்கூறல்கள் பெருந்திரளாகக் கூடிய பாமர மக்களை மகிழ்வித்தன. அறநெறிகளைப் போதித்து, வாழ்வித்தன. சமணர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இப்பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தது. இன்றும் தமிழகத்தின் சில கிராமப்புறங்களில் இப்பழக்கம் தொடருகிறது.

 ஆனால் ஆன்றோர்களின் அவையேறும் தகுதியையும் பண்டிதர்களின் மதிப்பையும் பெறாமல், எழுத்து வடிவம்கூட இல்லாமல், அது விளிம்பு நிலையிலேயே ஆனால் மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்துவந்தது. அதன் பல வாய்மொழிப் பதிவுகளின் சில கூறுகளே எச்சங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன. மற்றவை கிடைக்காமல் போயின. 1960களில் மதுரைப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் தமிழறிஞர் தெ.பொ.மீ. தமிழ் இலக்கியத்தின் இரு ஓடைகளில் ஒன்றாக வாய்மொழிப் பாரம்பரியத்தைக் கருதினார். அவற்றில் சிலவற்றைப் பல்கலைக்கழக அச்சு வடிவ ஆவணங்களாக வெளியிட்டார். இன்று நாட்டாரியல் பல பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களிலும் ஆய்வுகளிலும் மதிப்புமிக்க அங்கமாக இடம்பெற்றுள்ளது.

என்ன செய்கிறோம் என்று காலனிய ஆங்கில அதிகாரி கைண்டஸ்லி அறியவில்லை. ஒரு கருத்தாக்கமாகக்கூடத் தன்னுடைய பங்களிப்பைக் கருதவில்லை. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய கல்விப்புலத்தில் புதிய போக்கின் தொடக்கப் புள்ளியை அவர் வைத்தார். ‘வழுக்கள்’ நிறைந்த ‘பாமரத் தமிழ் வாய்மொழி வசன உரைகளை’ மூலமாகக் கொண்டார். அவை ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உகந்தவையா என்று யாரையும் கேட்கவில்லை. அவற்றை அப்படியே ஆங்கிலத்தில் கொண்டுசேர்த்தார். எனவே தமிழின் நாட்டார் மொழி இலக்கிய மரபை முதன்முதலில் ஆங்கில மொழிபெயர்ப்புக்காகக் கையில் எடுத்தவர் கைண்டஸ்லி. அவரின் முக்கியப் பங்களிப்பைத் தன்னுடைய ஆய்வு நூலில் கோவிந்தராஜன் மையப்படுத்துகிறார்.

தமிழ் மூல ஆய்வு நூலின் வரலாற்று, சமூக, பண்பாட்டுச் செறிவுகள், வளங்கள், மொழிப் பயன்பாட்டு ஆழங்கள்பற்றி ஆங்கில மொழி பெயர்ப்பு நூலின் வாசகர்கள் பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே வாசகர்களுக்கு வேண்டிய அனைத்து வாசிப்பு உதவிகளையும் தருவது மொழிபெயர்ப்பாளரின் தலையாயக் கடமை. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்கள் அக்கடமையைச் சிறப்புறச் செய்துள்ளார்கள். ஒரேயொரு எடுத்துக் காட்டாக, மூல நூலின் தலைப்பு: ‘அதிகாரமும் தமிழ்ப் புலமையும்.’ எக்காலத்து அதிகாரம், யாருடைய அதிகாரம், எப்படிப்பட்ட அதிகாரம் போன்ற கேள்விகளுக்கு மூலத் தலைப்பில் தகவல் இல்லை. மொழிபெயர்ப்பு நூலின் தலைப்பு: ‘Colonial Authority and Tamil Scholarship.’ மேலே கேட்ட கேள்விகளுக்கான தகவல்கள் மொழிபெயர்ப்புத் தலைப்பில் ஓரளவு கிடைக்கின்றன.

மூல நூலின் ஆய்வுகள்பற்றி மட்டுமல்லாமல், மேலதிகச் சில ஆய்வுக் கேள்விகளையும் தன்னுடைய முன்னுரையில், சி.டி. இந்திரா முன்வைக்கிறார். வாசகர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான பின்குறிப்புகளும் கலைச்சொல் விளக்கக் கோவையும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. மூலம், மொழிபெயர்ப்பு ஆகிய இரு நூல்களும் தலைப்பைப் பற்றிய நல்ல அறிமுக நூல்களாக உள்ளன. ஆழமான ஆய்வுகளுக்கு வழிகாட்டும் நூல்களாகவும் உள்ளன.

                  மின்னஞ்சல்: raajan.kt@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.