தமிழின் புதிய சலனம்

வெள்ளந்தியான காலத்தில் தமிழ்ப் படங்களில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் நூற்றுக்கணக்கில் வந்திருக்கின்றன. பாரசீக இலக்கியங்களின் கதாமாந்தர்கள் வீரதீரச் சாகசங்களோடு தமிழ்த் திரைப்படங்களில் இடம்பிடித்திருந்தார்கள். எம்ஜிஆர் மாத்திரமே ‘குலேபகாவலி’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘பாக்தாத் திருடன்’, ‘ராஜா தேசிங்கு’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னரும்கூட ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தின் இரு கதாபாத்திரங்களில் ஒன்றில் முஸ்லிமாக நடித்திருக்கிறார். இதர படங்களில் மாறுவேடங்களில் வருவதாக இருந்தால் அவற்றிலும் முஸ்லிமாகவே மாறுவேடங்கள் தரித்துள்ளார். இவற்றில்கூடத் தமிழ் முஸ்லிமாக எம்ஜிஆர் நடித்ததில்லை.
வடமாவட்டங்களில் பெருவாரியாக வாழும் உருது முஸ்லிம்களை மையமாக வைத்து, அவர்கள் தமிழை உருதுவோடு கலந்து பேசுவது போல நடித்தார். இதனால் த
