பலஸ்தீன - இஸ்ரேலிய எழுத்துக்கள்: பழைய நாவல்கள், நடப்புச் செய்திகள்
நான் இங்கே அறிமுகப்படுத்தப்போகும் மேற்காசிய நூல்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்தவை. ஒன்று, எலியாஸ் கூரியின் ‘சூரியனின் வாயில்’ (Elias Khoury, ‘Gate of the Sun’). இது 1998இல் அரபு மொழியில் வெளியாயிற்று. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவர இன்னும் ஏழு ஆண்டுகள் (2005) காத்திருக்க வேண்டியிருந்தது. மற்றது, லிண்டா கிராண்ட்டின், ‘நான் நவீன காலத்தில் வாழ்ந்தபோது’ (Linda Grant, ‘When I Lived in Modern Times’, 2000). இந்த இரண்டு நூல்களும் இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தாலும் கதாபாத்திரங்களுடைய பேச்சுகள், சம்பவங்கள், இடப்பெயர்வுகள் ஆகியன, ஏதோ இன்றைய இஸ்ரேலியரின் காஸா முற்றுகையின்போது எழுதியதுபோல் இருக்கின்றன. அன்று விவரித்த கற்பனை எழுத்துக்கள், இன்றைய நடப்புச் செய்திகளாக காணொளிகளிலும், அச்சு இலக்க (Digital) ஊடகங்களிலும் காணக்கூடியதாகவும் படிக்கக்கூடிய