ஏலக்காய் காப்பி
ஓவியங்கள்: மணிவண்ணன்
1.
நள்ளிரவு நேரம் இது.
தாழ்வாரத்தில் அமர்ந்திருந்து ஏலக்காய் காப்பியை அருந்திக்கொண்டிருக்கும் நான் கிறிஸ்ஸைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளாமலிருக்கக் கடுமையாக முயன்றுகொண்டிருக்கிறேன்.
“அவரை அழைக்கவோ, குற்றம் சாட்டிக் குமுறவோ வேண்டாம். அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்” என்று எனக்குச் சிகிச்சையளிப்பவள் என்னிடம் உபதேசித்திருக்கிறாள்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எனது வாய் நிறையத் தண்ணீரை நிரப்பிவைத்திருக்குமாறும் அவள் பரிந்துரைத்திருக்கிறாள்.
“அவரைக் கோபப்படுத்தும் வகையில் ஏதாவது சொல்லிவிடக் கூடும் என்று உனக்குத் தோன்றினால் உடனடியாக நாக்கைக் கடித்துக் கொள்” என்ற உபதேசம் எனது அம்மாவிடமிருந்து வந்திருக்கிறது.
எனது மருத்துவச்சிய