‘வ அலைக்கும் ஸலாம்’
ஓவியங்கள்: மணிவண்ணன்
மலாயாப் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவர் களான முஸ்தப்பாவும் சின்னப்பனும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஹாஸ்டலுக்கு வந்தபோது, சாலை யெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் இரண்டு, தாம் பெற்ற அபார வெற்றியைக் கொண்டாட அன்று மாலை கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் வெற்றி ஊர்வலத்தைப் பற்றிய சுவரொட்டிகள்தாம் அவை!
அத்தோடு, தேர்தலுக்கு முதல் நாள், பினாங்கில் ஓர் அரசியல் கட்சியின் மலாய் உறுப்பினர் ஒருவர், சீன குண்டர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் செயலாக, கெப்போங்கில் தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஒரு