கேனையன்
மனிதர்கள் குறித்த நிஜமான ஆர்வம் இருந்த என் சிறுபிராயத்தில் இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாழ்க்கையின்மீது அப்படிப்பட்ட ஆர்வத்தைத் திரும்பவும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக இதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது இப்படித்தான் நடந்ததென்று சொல்வதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. இப்படி நடந்திருக்கலாம் என்ற ஊகத்திற்கு நெருக்கமாக இருக்கும் கதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். அதிர்ஷ்டம், நமக்குச் சிலமனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களின் கதைகள் இருக்கின்றன. ஆனால் எந்த மனிதனை எடுத்துக்கொண்டாலும் அதில் எனக்கு நானே தென்படுவது வலியைத் தருகிறது.
வாசலில் சாணம் தெளிக்கிற மணெவ்வா ஆறிப்போன சாணி உருண்டையைத் தெளிப்பதை நிறுத்திவிட்டு வெறுமனே அப்படியே நின்றுவிட்டாள். வீட்டுவாசலைப் பெருக்காமல் பாதைவழியாக நடந்து வருகிற கிழவியின் உருவத்தைக் கண்கள