மானுட அறத்தின்மீதான விசாரணை
எண்பதுகளுக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர் தேவிபாரதி. ஆனால் 1993இல் இவரெழுதிய ‘பலி’ என்ற சிறுகதைதான் தேவிபாரதி என்ற எழுத்தாளரைத் தமிழ்ச் சூழலில்அறியச் செய்தது;அதேபோல காந்தியைப் பற்றிய இவரது புனைவான ‘பிறகொரு இரவு’ (2008) இவருக்குத் தேசிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.
தொடக்கத்தில் தேவிபாரதி, மார்க்சிய ஈடுபாட்டுடன் யதார்த்தவாதப் புனைவுகளை உள்ளீடுகளற்ற தட்டையான மொழியில் எழுதியிருக்கிறார். பலரும் எழுதித் தீர்த்த பொருண்மைகளையே தம் சிறுகதைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பலி’க்குக் (1993) கோவை ஞானி முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “எழுத்தாளன் பயிற்சிக்காக எழுதிக்கொள்கிற கதைகள்” என இவரது எட்டுக் கதைகளைக் குறிப்பிடுகிறார். தவிர, ‘மிருக வேட்டை’, ‘அழைப்பு’, ‘அழிவு’, ‘பலி’ ஆகிய நான்கு கதைகளின் வழியாக, தேவிபாரதி என்ற எழுத்தாளரை ஞானி கண்டுகொள்கிறார். இதில் ‘மிருக வேட்டை’, ‘அழைப்பு’ ஆகிய கதைகளில் சுந்தர ராமசாமியின் தாக்கம் இருப்