ஆகஸ்ட்
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஆகஸ்ட்
    • கட்டுரை
      அவசரநிலையும் எனது தலைமறைவு வாழ்க்கையும்
      அது ஓர் இருண்ட காலம்
      கருத்துரிமைக்குக் கறுப்பு நாட்கள்
    • கதை
      தீராக் கனல்
      நினைவுச் சிலை
      மாயச் சுண்ண வரைகோல்
    • சிறப்புப் பகுதி
      நெருக்கடி நிலை 50ஆம் ஆண்டு
    • நேர்காணல்: பக்தவத்சல பாரதி
      மனிதநேயத்திற்கான அறிவுத்துறையே மானிடவியல்
    • பதிவு
      வாழும் காலத்திலேயே உணரப்பட்ட மேதமை
    • தொடர் 80+
      ஆய்வுலகில் ஆ.சி.யின் பங்களிப்பு: அதிகாரமற்ற மனிதர்களின் அடையாள மீட்பு
    • திரை
      கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      பகடிமொழியில் உக்கிரமான இலக்கிய ஆய்வு
      உணவு: நீதியும் மரபும்
    • முன்னுரை
      இதுவரை அறியாத முகம்
    • கவிதைகள்
      கடைசியாக
    • தலையங்கம்
      தலையங்கம்
    • கற்றனைத்தூறும்-9
      தூய்மைக் கலை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் மதிப்புரை உணவு: நீதியும் மரபும்

உணவு: நீதியும் மரபும்

மதிப்புரை
அ.கா. பெருமாள்

நாஞ்சில் நாட்டு உணவு
(கட்டுரைகள்)
நாஞ்சில் நாடன்

வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு, 
நாகர்கோவில் - 629 001
பக். 504
ரூ. 590

பண்பாடு எப்போதுமே நேர்கோட்டுச் சிந்தனை உடையதாய் இருந்ததல்ல; அது பன்முகத்தன்மை கொண்டது. வழக்காறும் எல்லாக் காலத்திலும் பன்முகத் தன்மைமையுடன்தான் இயங்கி வந்திருக்கிறது. இதன் சிறப்பே வட்டாரச் சார்பு உடையது என்பதுதான். நாட்டார் வழக்காற்றின் வகைமைகள் எல்லாமே பன்முகத் தன்மை கொண்டவை இவற்றில் உணவு பற்றிய பதிவுகள் தமிழில் குறைவாகவே இருக்கின்றன.

ஒரு வட்டாரத்தின் அல்லது சமூகத்தின் புழங்கு பொருட்கள், சடங்குகள், உணவுப் பழக்கம் போன்றவை அந்தச் சமூகத்தின் தொன்மையை, மரபு வழியான வளர்ச்சியைக் காட்டுவன. உணவு, சாப்பாடு என்பது வயிற்றை நிரப்புவதற்கும் உயிர் வாழ்வதற்கும் மட்டும் உரியதல்ல, அது அந்தச் சமூகத்தின் வாழ்க்கை வட்டக் கூறுகளில் எல்லா அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதை நாஞ்சில் நாடன் இந்த நூலில் விரிவாகவே விளக்குகிறார். இந்த வகையில் தமிழில் இந்நூலை முதல் நூலாகக் கொள்ளலாம்.

இது சமையல் புத்தகம் அல்ல, ஆனால் உணவு சமைக்கும் பக்குவத்தையும் முறையையும் சொல்கிறது; வட்டார உணவுகள்குறித்த சேகரிப்பின் மூலம் அந்த வட்டாரப் பண்பாட்டுக் கோலங்களை வரைபடமிட்டுக் காட்டுவது நூலின் தனிச்சிறப்பு. உணவு வகைகளைச் சொல்வதன் மூலம் அந்தப் பண்பாட்டுக் கூறுகளையும் சுவைபடச் சொல்வது சவாலான காரியம்.

நாட்டார் கலைகள், நாட்டார் தெய்வங்கள்பற்றிச் சுவையாகச் சொல்வதற்கு அவற்றின் பின்னணி இடம் தரும். ஆனால் உணவு வகைகளைப் பற்றிச் சொல்வதிலும் சுவாரசியத்தைக் கொண்டுவர முடியும் என்பதை நாஞ்சில் நாடன் நிரூபித்திருக்கிறார்.

உணவு பரிமாறுவதிலும் அதன் வரிசையிலும் முறையான நீதியும் மரபும் உண்டு. இந்த மரபை மீறும்போது குறிப்பிட்ட சமூகத்துக்குள் வட்டாரத்துக்குள் உரசல்கள் வந்திருக்கின்றன. இதுபற்றிய பதிவுகள் எழுத்துச் சான்றுகளில் மட்டுமே உள்ளன. வாய்மொழி மரபிலும் உணவுப் பண்பாட்டிலும் இது உண்டு என்பதை நூல் தொட்டுச் செல்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள பல உணவு வகைகள் இன்று வழக்கில் இல்லை. ஒரு சமூகத்தின் குடிப்பெயர்ச்சி, வசதிக் குறைவு போன்ற காரணங்களால் அவற்றின் சடங்குகளும் அவை தொடர்பான உணவுகளும் மறைந்துவிடும் மாற்றத்தை உணவுப் பண்பாட்டின் வழி ஆழமாகப் பதிவுசெய்தி ருக்கிறார் ஆசிரியர். இந்த வகையில் தமிழில் வந்த பண்பாட்டு மானுடவியல் நூலாகவும் இதைக் கருதலாம்.

 மின்னஞ்சல்: perumalfolk@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.