‘‘இன்னொருவர் கருத்தை என் மொழியில் சொல்வதே மொழிபெயர்ப்பு ’’
படங்கள்: புதுவை இளவேனில்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (80), புதுவைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத் துறைத் தலைவர், வாழ்வியல் புலத் தலைவர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் பல நூல்களை மொழியாக்கம் செய்துள்ள இவர் பிரெஞ்சு அரசின் செவாலியே, ஒஃபீசியே, கொமாந்தர் ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். கேரவான், வுமன்ஸ் எரா, ஈவ்ஸ் வீக்லி முதலான ஆங்கில இதழ்களில் இலக்கியம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புப் பணிகள், மொழிபெயர்ப்புக் கருத்தாக்கங்கள், பிரெஞ்சு---தமிழ் பரிமாற்றங்கள் எனப் பலவற்றைக் குறித்தும் செப்டம்பர் மாதத்தில் பாண்டிச்சேரியில் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடியதன் தொகு