நிறம் பழுப்பு, எண்ணம் வெண்மை
சில பழைய சரித்திரச் செய்திகள். ரிஷி சுனக்குக்கு முன்பு முதன்முதலில் இந்திய ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் தாதாபாய் நௌரோஜி. இவர் பம்பாய்க்காரர். 1892ஆம் ஆண்டு சென்ட்ரல் ஃபின்ஸ்பரியின் லிபரல் கட்சியின் பிரதிநிதியாக மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதற்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஹோல்போர்ன் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்தலில் தோல்வியடைந்தார். அந்த நேரத்தில் பிரதம மந்திரி சாலிஸ்பரி பிரபு கூறியது: “கறுப்பினர் ஒருவரைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ள ஆங்கிலேயர்கள் இப்போது தயாராக இல்லை.” இன்று 650 உறுப்பினர்கொண்ட பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதினைந்து இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நௌரோஜி ஒரு பார்சி. ஆகையினால் கிறிஸ்தவத் திருமறையின்மீது சத்தியம் செய்யாமல் சொராஷ்டியர்களின் வேதமான ‘கோர்டே அவெஸ்டா