தானாய் முளைத்து வளர்ந்த தனிப்புலமை
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வாழ்ந்து 2022 அக்டோபர் 21இல் தம் 86 ஆம் அகவையில் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட புலவர் காசுமான் ஓர் அதிசயப் புலவர்; அற்புத மனிதர். அவர் முறையாகக் கல்வி நிலையங்களில்படித்துத் தேறித் தன் புலமையை வளர்த்தவர் அல்லர். தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் இயல்பாகத் தோன்றிய ஈடுபாடு அவரை அறியாமலே அவருக்குள் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வளர்ந்து அவரை ஒரு காவியப் புலவராக, இலக்கண நூல் ஆசிரியராக, இன்கவிக் கவிஞராக, நுண்மாண் நுழை புல ஆய்வாளராக, குறள் உரையாசிரியராக ஆக்கியது முற்பிறப்புத் தொடர்ச்சியோ என அவர் தன்னைத்தானே வியந்துகொள்வார். உண்மையும் அதுதானோ?
குமரி மாவட்டம் கோடிமுனையில் மிகெயில் பிள்ளை – ஞானப்பிரகாசி இணையருக்குப் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த பின் சென்னையில் வாழ்ந்திருக்கிறார். அங்கு தாமே கற்ற தமிழைப் பிறரு