‘நிமித்திரன்’ என்பது பாரதியா?
மாகாளி கடைக்கண் வைத்தாளோ இல்லையோ? பாரதி உருசிய நாட்டினில் ஏற்பட்ட புரட்சியின்பால் கடைக்கண் வைத்ததன் விளைவே ‘புதிய ருஷியா’ என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதையாகும். உலகளாவிய நிலையில் ஏற்பட்ட மாபெரும் நிகழ்வின்மீது தமிழ்க் கவிதை முன்வைத்த முதற்பெரும் எதிர்வினை என்றும் இதனைக் கொள்ளலாம். இந்தக் கவிதை வெளிவந்த மூல ஏடும் துல்லியமான காலக்குறிப்பும் இன்றுவரை கிட்டவில்லையெனினும் பாரதியின் கையெழுத்துப் பிரதியாகவே கிடைத்து அழியாத மூல ஆவணக் காட்சியாக முகம் காட்டிக்கொண்டிருக்கின்றது.
இந்தக் கவிதை பிப்ரவரிப் புரட்சியை ஒட்டி எழுதப்பட்டதா, அக்டோபர் புரட்சியை ஒட்டி எழுதப்பட்டதா என்பது வினாவாகவும் விவாதமாகவும் ஆகியிருக்கின்றது. பிப்ரவரிப் புரட்சியைக் குறித்து எழுதப்பட்டது என்பது ரா.அ. பத்மநாபனின் கருத்து. அக்டோபர் புரட்சியை வரவேற்று எழுதினார் என்பது தொ.மு.சி. ரகுநாதனின் கருத்து. எதனை ஒட்டி எழுதப்பட்டதா