ஆறுமுக நாவலரும் சாதி நூல் உருவாக்கமும்
பிரிட்டிஷ் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சட்டத்தின்போதும் இந்திய, தமிழக அறிவுஜீவிகளிடம் சாதி குறித்த ஓர்மை கூர்மை அடைந்தது. புதிய சட்டங்களினால் சாதியமைப்பில் நெகிழ்வுத் தன்மை வந்துவிடுமோவென அஞ்சினர். நிருவாக வசதிக்காகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முக்கியமானதாகக் கருதினர். அது சமுதாயத்தை வகைப்படுத்திப் புரிந்துகொள்ளவும், திட்டங்களை அமல்படுத்தவும், மக்களின் வட்டாரப் பண்பாட்டை அறிந்துகொள்ளவும் பயன்படும் என நம்பினர். ஏற்கெனவே இருந்த நால்வருண அமைப்பு முறைமையை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் கணக்கெடுப்பும் இருந்தது. இந்தச் சூழலில் இந்திய, தமிழக அறிவுஜீவிகள் தமது சாதிக்கான வரலாற்றைப் பழைய இலக்கியங்கள், நிகண்டுகள், புராணங்கள், வழக்காறுகளில் இருந்து சான்று காட்டி எழுதத் தொடங்கினர். அந்நூல்கள் தத்தம் ச