வரவேற்கத்தக்க விதிவிலக்கு
மக்கள் போராட்டங்களின்மீது அரசு அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவுவது புதிதல்ல. நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து நிகழ்த்தும் வன்முறையைப் பற்றிப் பொதுவெளியில் எழும் காரமான விமர்சனங்களும் நீதிமன்ற வழக்குகளும் அந்த வன்முறை குறித்த விசாரணையை மேற்கொள்வதற்கான நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்துவதும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுவதும் புதிதல்ல. அரசு வன்முறை தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் நிவாரணம் வழங்கவும் பரிந்துரைப்பது ஒப்பீட்டளவில் புதிது. மக்களின் கோபத்தை மட்டுப்படுத்தப் பயன்படும் ஆணையங்கள் கால தாமதத்தினாலும் அரசின் மீதான செல்லமான அணுகுமுறையினாலும் விசாரணையின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்வதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இந்தப் பின்னணியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கத்தக்க விதிவிலக்கு என்று சொல்ல வேண்டும்.
2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்றுவந்த போராட்டத்தின் நூறாவது நாளன்று (மே 22) நிகழ்ந்த வன்முறையும் அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடும் தமிழகத்தையே உலுக்கின. துப்பாக்கிச் சூட்டில் பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். நாற்பது பேருக்குப் பலத்த காயங்களும் அறுபத்து நான்கு பேருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டன. இத்தகைய வன்முறைக்கான எதிர்வினைகளின் வெம்மை அதிகரித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதைக் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தது. நான்கு ஆண்டுகள் கழித்து அந்த ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையைத் தற்போதுள்ள திமுக அரசுக்குச் சமர்ப்பித்தது. அறிக்கையைக் கடந்த அக்டோபர் மாதம் அரசு வெளியிட்டது.
இந்த விசாரணையில் இரண்டு முக்கியமான அம்சங்கள் குறிப்பிடத் தகுந்தவை. ஒன்று ஒப்பீட்டளவில் விரைவில் விசாரணையை நடத்தி முடித்தது. இரண்டாவது, அரசு நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மீது நேரிடையான, திட்டவட்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருப்பது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை காவல்துறை தன்னுடைய அடிப்படையான கடமைகளை மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மே 22 அன்று போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்டக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்ததை ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. “2018 மே 13முதல் 22ஆம் தேதிவரை போராட்டத்தின் தீவிரத்தன்மை படிப்படியாக அதிகரித்திருந்தது. குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு முன்கூட்டியே கைது செய்திருந்தால் போராட்டம் கலவரமாக மாறியதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடாகவும் அலட்சியமாகவும் இருந்தன. மாவட்ட ஆட்சியர் தனது கடமையிலிருந்து தவறி அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார்” என்று ஆணைய அறிக்கை கூறுகிறது.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது. டிஐஜியும் உதவி எஸ்பியும் உத்தரவிட்ட துப்பாக்கிச் சூடுபற்றி ஐஜிக்குக்கூடத் தெரியவில்லை எனவும் டிஐஜி தானாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் எனவும் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
“சுடலைக்கண்ணு என்ற காவலர் அபாயகரமான துப்பாக்கியால் பதினேழு ரவுண்டுகள் சுட்டுள்ளார். அவரை நான்கு இடங்களில் வைத்துச் சுட வைத்துள்ளதன் மூலம், அவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தி யுள்ளது” என்று குற்றம்சாட்டும் அறிக்கை, போராட்டம் நடத்தியவர்கள்மீது போலீஸார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் கூறுகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை, முதுகுப் பகுதியின் வழியாகக் குண்டு துளைத்து முன்வழியாக உள்ளுறுப்புகளைச் சிதைத்து வெளியே வந்திருக்கிறது. இடுப்புக்குக் கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல் துறையினர் வரம்புமீறியும் அத்துமீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கை மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பதினேழு பேர்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்மீதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூவர்மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணத் தொகைக்கான பரிந்துரைகளை ஆணையம் முன்வைத்துள்ளது.
ஆணையங்களின் விசாரணை அறிக்கைகள் கண்துடைப் பாகவும் அரசு அத்துமீறலைப் பூசிமெழுகும் சுண்ணாம்பாகவும் இருந்துவருவதே வாடிக்கையாக இருக்கும் சூழ்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. ஆணையம் பல்வேறு அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள்மீது நேரடியாகக் குற்றம் சுமத்தியிருக்கிறது. நடந்தது காவல் துறையின் தவிர்க்க முடியாத நடவடிக்கையின் பின்விளைவோ சாதாரண அத்துமீறலோ அல்ல என்றும் பொதுமக்களில் பலர் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இனி வரும் காலங்களில் போராட்டத்தைக் கையாள்வது குறித்த எச்சரிக்கையைக் காவல்துறைக்கும் நிர்வாகத் தரப்பினருக்கும் அறிக்கை விடுத்திருக்கிறது என்று சொல்லலாம். கண்துடைப்பு அறிக்கைகள் தரும் பாதுகாப்பு இனிக் கிடைக்காமல்போகலாம். இது அதிகாரத்தில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அங்குசமாக அமையக்கூடும்.
துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் பழனிசாமி தெரிவித்ததையும் ஆதாரப்பூர்வமாக ஆணையம் மறுத்துள்ளது. அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்ததைப் பதிவுசெய்து முன்னாள் முதல்வரின் பசப்பலை ஆணையம் அம்பலப்படுத்தியிருக்கிறது. அதிமுக அரசு அமைத்த இந்த ஆணையத்தின் முடிவுகள் அந்த அரசின் தவறுகளையும் தோல்விகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒருவேளை அதிமுக அரசு தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்குமா என்பதே ஐயம்தான் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
அதுபோலவே, சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று சொன்ன திரைப்பட நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் முன்வைக்கப்பட்ட கருத்து இது என்று குறிப்பிட்டுள்ளது.
திமுக அரசு ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்டுக் காவல்துறையினரின் குற்றங்களும் போராட்டக்காரர்களின் நியாயங்களும் பொதுமக்களுக்குத் தெரிவதற்கு வழி வகுத்துள்ளது. அதிமுக அரசுக்கெதிரான விமர்சனத்தை அம்பலப்படுத்துவது அரசியல்ரீதியாகத் திமுகவுக்குப் பலனளிக்கக் கூடியது என்றாலும் அதைத் தாண்டி இதன் பலன்கள் விரிகின்றன. காவல்துறையினர் இழைத்த குற்றமும் மாவட்ட ஆட்சியரின் தவறுகளும் முதலமைச்சர் தெரிந்தே பொய் கூறியிருப்பதும் ஆதாரபூர்வமாக அம்பலமாவது அரசியல்-சமூகக் களங்களில் தொலைநோக்கிலான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை.
அறிக்கையை வெளியிட்டு அதன் பரிந்துரைகளின் பேரில் சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கும் திமுக அரசு இவ்விஷயத்தில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. குற்றம் இழைத்த காவல் துறையினர்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. கீழ்மட்டத்திலுள்ள சிலர்மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேல் பதவிகளில் இருப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நடந்தவை திட்டமிட்ட கொலைகளாய் இருப்பதால் துறைசார்ந்த நடவடிக்கையாக இதைக் குறுக்காமல் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதே பொருத்தமாக இருக்கும். அதுபோலவே துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு ஐம்பது லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை முழுமையாகவும் உடனடியாகவும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வளவு பெரிய குற்றச் செயல் குறித்து மக்களிடம் தவறான தகவல் அளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆதாரமின்றிப் போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்திப் பேசிய ரஜினிகாந்தும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தருணங்களில் பதவியில் உள்ளவர்களும் பிரபலங்களும் மேலும் பொறுப்புடன் பேசுவதற்கான சூழலை அது நிச்சயமாக உருவாக்கும்.
மக்கள் போராட்டங்களின்மீது அரசு அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவுவது புதிதல்ல. நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து நிகழ்த்தும் வன்முறையைப் பற்றிப் பொதுவெளியில் எழும் காரமான விமர்சனங்களும் நீதிமன்ற வழக்குகளும் அந்த வன்முறை குறித்த விசாரணையை மேற்கொள்வதற்கான நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்துவதும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுவதும் புதிதல்ல. அரசு வன்முறை தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் நிவாரணம் வழங்கவும் பரிந்துரைப்பது ஒப்பீட்டளவில் புதிது. மக்களின் கோபத்தை மட்டுப்படுத்தப் பயன்படும் ஆணையங்கள் கால தாமதத்தினாலும் அரசின் மீதான செல்லமான அணுகுமுறையினாலும் விசாரணையின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்வதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இந்தப் பின்னணியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கத்தக்க விதிவிலக்கு என்று சொல்ல வேண்டும்.
2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்றுவந்த போராட்டத்தின் நூறாவது நாளன்று (மே 22) நிகழ்ந்த வன்முறையும் அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடும் தமிழகத்தையே உலுக்கின. துப்பாக்கிச் சூட்டில் பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். நாற்பது பேருக்குப் பலத்த காயங்களும் அறுபத்து நான்கு பேருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டன. இத்தகைய வன்முறைக்கான எதிர்வினைகளின் வெம்மை அதிகரித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதைக் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தது. நான்கு ஆண்டுகள் கழித்து அந்த ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையைத் தற்போதுள்ள திமுக அரசுக்குச் சமர்ப்பித்தது. அறிக்கையைக் கடந்த அக்டோபர் மாதம் அரசு வெளியிட்டது.
இந்த விசாரணையில் இரண்டு முக்கியமான அம்சங்கள் குறிப்பிடத் தகுந்தவை. ஒன்று ஒப்பீட்டளவில் விரைவில் விசாரணையை நடத்தி முடித்தது. இரண்டாவது, அரசு நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மீது நேரிடையான, திட்டவட்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருப்பது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை காவல்துறை தன்னுடைய அடிப்படையான கடமைகளை மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மே 22 அன்று போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்டக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்ததை ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. “2018 மே 13முதல் 22ஆம் தேதிவரை போராட்டத்தின் தீவிரத்தன்மை படிப்படியாக அதிகரித்திருந்தது. குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு முன்கூட்டியே கைது செய்திருந்தால் போராட்டம் கலவரமாக மாறியதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடாகவும் அலட்சியமாகவும் இருந்தன. மாவட்ட ஆட்சியர் தனது கடமையிலிருந்து தவறி அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார்” என்று ஆணைய அறிக்கை கூறுகிறது.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது. டிஐஜியும் உதவி எஸ்பியும் உத்தரவிட்ட துப்பாக்கிச் சூடுபற்றி ஐஜிக்குக்கூடத் தெரியவில்லை எனவும் டிஐஜி தானாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் எனவும் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
“சுடலைக்கண்ணு என்ற காவலர் அபாயகரமான துப்பாக்கியால் பதினேழு ரவுண்டுகள் சுட்டுள்ளார். அவரை நான்கு இடங்களில் வைத்துச் சுட வைத்துள்ளதன் மூலம், அவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தி யுள்ளது” என்று குற்றம்சாட்டும் அறிக்கை, போராட்டம் நடத்தியவர்கள்மீது போலீஸார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் கூறுகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை, முதுகுப் பகுதியின் வழியாகக் குண்டு துளைத்து முன்வழியாக உள்ளுறுப்புகளைச் சிதைத்து வெளியே வந்திருக்கிறது. இடுப்புக்குக் கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல் துறையினர் வரம்புமீறியும் அத்துமீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கை மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பதினேழு பேர்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்மீதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூவர்மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணத் தொகைக்கான பரிந்துரைகளை ஆணையம் முன்வைத்துள்ளது.
ஆணையங்களின் விசாரணை அறிக்கைகள் கண்துடைப் பாகவும் அரசு அத்துமீறலைப் பூசிமெழுகும் சுண்ணாம்பாகவும் இருந்துவருவதே வாடிக்கையாக இருக்கும் சூழ்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. ஆணையம் பல்வேறு அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள்மீது நேரடியாகக் குற்றம் சுமத்தியிருக்கிறது. நடந்தது காவல் துறையின் தவிர்க்க முடியாத நடவடிக்கையின் பின்விளைவோ சாதாரண அத்துமீறலோ அல்ல என்றும் பொதுமக்களில் பலர் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இனி வரும் காலங்களில் போராட்டத்தைக் கையாள்வது குறித்த எச்சரிக்கையைக் காவல்துறைக்கும் நிர்வாகத் தரப்பினருக்கும் அறிக்கை விடுத்திருக்கிறது என்று சொல்லலாம். கண்துடைப்பு அறிக்கைகள் தரும் பாதுகாப்பு இனிக் கிடைக்காமல்போகலாம். இது அதிகாரத்தில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அங்குசமாக அமையக்கூடும்.
துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் பழனிசாமி தெரிவித்ததையும் ஆதாரப்பூர்வமாக ஆணையம் மறுத்துள்ளது. அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்ததைப் பதிவுசெய்து முன்னாள் முதல்வரின் பசப்பலை ஆணையம் அம்பலப்படுத்தியிருக்கிறது. அதிமுக அரசு அமைத்த இந்த ஆணையத்தின் முடிவுகள் அந்த அரசின் தவறுகளையும் தோல்விகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒருவேளை அதிமுக அரசு தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்குமா என்பதே ஐயம்தான் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
அதுபோலவே, சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று சொன்ன திரைப்பட நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் முன்வைக்கப்பட்ட கருத்து இது என்று குறிப்பிட்டுள்ளது.
திமுக அரசு ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்டுக் காவல்துறையினரின் குற்றங்களும் போராட்டக்காரர்களின் நியாயங்களும் பொதுமக்களுக்குத் தெரிவதற்கு வழி வகுத்துள்ளது. அதிமுக அரசுக்கெதிரான விமர்சனத்தை அம்பலப்படுத்துவது அரசியல்ரீதியாகத் திமுகவுக்குப் பலனளிக்கக் கூடியது என்றாலும் அதைத் தாண்டி இதன் பலன்கள் விரிகின்றன. காவல்துறையினர் இழைத்த குற்றமும் மாவட்ட ஆட்சியரின் தவறுகளும் முதலமைச்சர் தெரிந்தே பொய் கூறியிருப்பதும் ஆதாரபூர்வமாக அம்பலமாவது அரசியல்-சமூகக் களங்களில் தொலைநோக்கிலான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை.
அறிக்கையை வெளியிட்டு அதன் பரிந்துரைகளின் பேரில் சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கும் திமுக அரசு இவ்விஷயத்தில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. குற்றம் இழைத்த காவல் துறையினர்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. கீழ்மட்டத்திலுள்ள சிலர்மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேல் பதவிகளில் இருப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நடந்தவை திட்டமிட்ட கொலைகளாய் இருப்பதால் துறைசார்ந்த நடவடிக்கையாக இதைக் குறுக்காமல் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதே பொருத்தமாக இருக்கும். அதுபோலவே துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு ஐம்பது லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரையை முழுமையாகவும் உடனடியாகவும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வளவு பெரிய குற்றச் செயல் குறித்து மக்களிடம் தவறான தகவல் அளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆதாரமின்றிப் போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்திப் பேசிய ரஜினிகாந்தும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தருணங்களில் பதவியில் உள்ளவர்களும் பிரபலங்களும் மேலும் பொறுப்புடன் பேசுவதற்கான சூழலை அது நிச்சயமாக உருவாக்கும்.